செய்திகள்

மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் – வைத்தியர் ஆலோசனை

Published

on

மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் – வைத்தியர் ஆலோசனை

நாடுமுழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது மிக அவசியம் என சுகாதார துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் அதிகமாக கீரை வகைகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கொரோனாவுக்கென குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லாத நிலையில் மக்களுக்கான ஒரே தீர்வு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே. இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலை, மக்களின் உள ஆரோக்கியத்தை பாதிக்க கூடும் என்பதால், அனைவரும் மூன்று வேளை உணவுகளையும் தவறாது உண்ண வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியமான விட்டமின் சி  மரக்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து கிடைக்கின்றன. நாளொன்றுக்கு குறைந்தது 3 வகையான மரக்கறிகள் சாப்பிட வேண்டும். புரதம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அன்றாட வாழ்வில் பால், பழவகைகள், தானிய வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version