செய்திகள்

ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!

Published

on

ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!

அமைச்சர்கள் அனைவரதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை(Minister’s Salary) கொரோனா நிதியத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று மாலைகூடிய அமைச்சரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் நாளை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

கொவிட் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தமது சம்பளத்தை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version