செய்திகள்

கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா

Published

on

கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா

நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் எவற்றையும் பெறாத குடும்பங்கள் மாத்திரமே இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது.

அரச ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், சமுர்த்தி பயனாளிகள், முதியோர் கொடுப்பனவை பெறுவோர் மற்றும் ஊனமுற்றோர் அடங்கலாக மாதாந்தம் அரசிடமிருந்து கொடுப்பனவை பெறுவோருக்கு 2000 ரூபா வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி செயலணி மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version