செய்திகள்
ஊரடங்கை மீறுவோர் கைதாவர் – பொலிஸ் தலைமையகம்
ஊரடங்கை மீறுவோர் கைதாவர் – பொலிஸ் தலைமையகம்
நாட்டில் நேற்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைதுசெய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விசேட நடவடிக்கையானது நேற்றிரவு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக தனி பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளந எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login