செய்திகள்

3 லட்சம் முதியவர்கள் தடுப்பூசி ஏற்றவில்லை! – சன்ன ஜயசுமன தெரிவிப்பு

Published

on

3 லட்சம் முதியவர்கள் தடுப்பூசி ஏற்றவில்லை! – சன்ன ஜயசுமன தெரிவிப்பு

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை எவ்வித தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களே அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நாளாந்தம் கொரோனாவால் மரணிப்போரில் அதிகளவானோர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர்.

இதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார், கிராம சேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என சன்ன ஜயசுமன கூறினார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version