சமையல் குறிப்புகள்

தித்திக்கும் சுவை மிகுந்த மாம்பழ சட்னி

Published

on

தித்திக்கும் சுவை மிகுந்த மாம்பழ சட்னி

குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும், காலை உணவுடன் சேர்த்து உண்ண தித்திக்கும் சுவையுடன், இலகுவாகத் தயாரிக்கக்கூடிய மாம்பழ சட்னி தயாரித்துக் கொள்ள சிம்பிள் படிமுறை உங்களுக்காக………

தேவையான பொருள்கள்:

மாம்பழம் – 2
கடுகு – தாளிக்க
செத்தல் மிளகாய்- – 2
வறுத்த சீரகப் பொடி- 1 கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
வெல்லம்- தேவையான அளவு
நல்லெண்ணெய் – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

மாம்பழத்தை தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.

அடுப்பை சூடாக்கி, சட்டியை வைத்து சட்டி காய்ந்ததும் அதில் நல்லெண்ணெயை ஊற்றிக்கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடானதும், அதில் கடுகை சேர்த்து தாளித்து அதனுடன் செத்தல்மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்பு தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி வைத்த மாம்பழத்தை அதில் சேர்த்து வதக்கி மூடி விடுங்கள்.

அடுப்பை அளவான சூட்டில் வைத்து, 5 நிமிடங்கள் கழித்துமூடியைத் திறந்து பாருங்கள். கலவை நன்றாக வெந்து காணப்படும். அதனை நன்றாக மசித்து அதில் சீரகப்பொடி , உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் தேவையாக அளவு தண்ணீரும் சேர்த்து சிறிது நேரம் வேக வையுங்கள். சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி தேவையெனில் முந்திரி திராட்சையால் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

இப்போது சூப்பரான தித்திக்கும் சுவையுடன் மாம்பழ சட்னி தயார்.

இதனை தோசை, பாண் மற்றும் வடை போன்ற உணவுகளுடன் சேர்த்து உண்ணலாம்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version