சினிமா

என்னை மாதிரியே நடிக்கிறியாமே!  ஆள் வைத்து அடித்த வடிவேலு!

Published

on

என்னை மாதிரியே நடிக்கிறியாமே!  ஆள் வைத்து அடித்த வடிவேலு!

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர். தற்போது மாமன்னன் படம் மூலமாக குணச்சித்திர நடிகராகவும் எல்லோரையும் கவர்ந்து இருக்கிறார். அடுத்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் பலருக்கும் தெரியாத வடிவேலுவின் இன்னொரு முகத்தை பற்றி நடிகர் காதல் சுகுமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

சுகுமார் வடிவேலு போலவே தோற்றத்தில் இருந்ததால் அவர் ராஜ் டிவியின் ஊர்வம்பு நிகழ்ச்சியில் வடிவேலு போலவே perform செய்து வந்தார். அதன் மூலமாக அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் வந்தது. தவசி என்ற படத்தில் அவர் வடிவேலு போலவே மேனரிசம் காட்டி நடித்து இருக்கிறார்.

அதே போல நடிக்க பல கம்பெனிகளில் இருந்து அவருக்கு வாய்ப்பு வர தொடங்கி இருக்கிறது. அப்போது வடிவேலு உடன் இருக்கும் நடிகர்கள் இருந்து பேர் வந்து சுகுமாரை வடிவேலுவிடம் அழைத்து சென்று இருக்கின்றனர்.

‘என்னை மாதிரி நடிப்பேன்னு கம்பெனி கம்பெனியா போய் சொல்லிட்டு இறுக்கியாமே’ என வடிவேலு கேட்டாராம். ‘அப்படி வாய்ப்பு வருகிறது, முதல் படம் என்பதால் நடித்துவிட்டேன், இனி நடிக்க மாட்டேன் அண்ணே’ என சுகுமார் பம்மி இருக்கிறார்.

அப்போது அங்கிருந்தவர்களை எல்லாம் வெளியில் அனுப்பிவிட்டு சுகுமாரை வடிவேலுவின் ஆட்கள் தாக்கினார்களாம். ரத்தம் வரும் அளவுக்கு அடித்து தான் அனுப்பினார்கள்.

இந்த அவமானத்தில் தவறான முடிவை எடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டேன். என் மனைவி தான் என்னை தடுத்தார்.

அதற்கு பிறகு தான் காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இதற்கு முன் இருந்த வடிவேலு சாயலே தெரியக்கூடாது என இயக்குனரிடம் சொல்லி முற்றிலும் வேறு விதமாக நடித்தேன் என சுகுமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

1 Comment

  1. Pingback: 'சந்திரமுகி -2' இன் டிரெய்லர்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version