சினிமா

சமந்தா- நாகசைதன்யா பிரிவுக்குக் காரணம் இதுதானா?

Published

on

நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

4 வருடங்கள் தொடர்ந்த இந்த திருமண உறவு, கடந்த ஒக்டோபர் மாதம் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து தற்போது இருவரும் விவாகரத்துப் பெற்று தனியாக வாழ்கின்றனர்.

இந்நிலையில், தற்போது நாகசைத்தன்யாவிடம் செய்தியாளர்கள் நடிப்புக் குறித்து கேள்வி ஒன்றினைக் கேட்டிருந்தனர்.

அக்கேள்விக்கு பதில் வழங்கிய நாகசைதன்யா,

” நான் எந்த ஒரு படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்பும், அந்த ரோல் என்னுடைய குடும்பத்தையும், கௌரவத்தையும் பாதித்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன் “.

அதுமட்டுமல்லாமல், என்னுடைய குடும்பத்தினரை தர்மசங்கடப்படுத்தும்படியான ரோலில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்றும் பதில் வழங்கியுள்ளார்.

நாகசைதன்யா கூறிய பதிலானது தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. காரணம் சமந்தா சில சர்ச்சைக்குரிய ரோல்களை ஏற்று நடித்தது தான், இவர்கள் இருவரும் பிரிவதற்குக் காரணமோ என சமூகவலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

#CinemaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version