சினிமா

உனது வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள் – சமந்தாவுக்கு வனிதா அட்வைஸ்

Published

on

சமூகத்தில் ஒழுக்கம் இல்லை என நடிகை சமந்தா விவகாரத்திற்கு பின்னர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

தனது பதிவில், ‘ஒரு பெண் முடிவு எடுக்கும்போது இந்த சமூகம் அவளது ஒழுக்கம் குறித்த கேள்விகளைக் கேட்கிறது. அதே முடிவை ஆண் எடுக்கும்போது அவ்வாறு கேள்வி எழுப்புவதில்லை. இதன்படி பார்த்தால் இந்த சமூகம்தான் ஒழுக்கம் இல்லாமல் இருப்பது போல தோன்றுகிறது என பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பதிவொன்றினை இட்டுள்ள வனிதா,

‘இங்கே சமூகம் என்று எதுவுமே இல்லை பேபி, உனது வாழ்க்கையை நன்றாக வாழக் கற்றுக்கொள் என்று அட்வைஸ் செய்வதோடு, ‘மக்கள் நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள்.

அவர்களைப் பற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. நீ உன்னுடைய வாழ்க்கையை நோக்கி முன்னேறிக் கொண்டு போய்க்கொண்டே இரு,  உனக்கு வலிமை இன்னும் கூடும்’ என்று பதிவு செய்துள்ளார்.

சமந்தா மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரின் இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version