சினிமா
சொந்தக்குரலில் டப்பிங் பேசும் த்ரிஷா
நடிகை த்ரிஷா தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் இதிகாச கதையை மணிரத்தினம் திரைப்படமாக இயக்கி வருகின்றார்.
பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடிகை த்ரிஷா நடிக்கின்றார்.
த்ரிஷா ஒரு சில படங்களிலேயே தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசி நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில், டப்பிங் பேசி நடிக்கிறார் த்ரிஷா.
பொன்னியின் செல்வன், சுமார் 500 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login