அழகுக் குறிப்புகள்
சருமத்துக்கு பளபளப்பை கொடுக்கும் அன்னாசிப்பழம்! இப்படி பயன்படுத்துங்க
இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன.
இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது மற்றும் பல நோய்களை தீர்க்கவும் உதவுகின்றது.
குறிப்பாக சரும அழகிலும் பெரிதும் பங்குவகிக்கின்றது. இதனை ஒரு சில பொருட்களுடன் கலந்து பயன்படுத்தினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். நல்ல மாற்றம் தெரியும்.
- சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து கலந்து இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவலாம். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. இதனை தினமும் பயன்படுத்தலாம்.
- சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு 2 டீஸ்பூன் தேங்காய்ப்பாலுடன், ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கும். வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும்.
You must be logged in to post a comment Login