சினிமா

கார் சாவியை தொலைத்த ரஜினியின் மகள்!

Published

on

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஐஸ்வர்யா வீட்டு பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரும் ஐஸ்வரியாவின் வீட்டிலிருந்து திட்டமிட்டு நகைகளை திருடியது தெரியவந்தது. சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது சொகுசு காரின் சாவி தொலைந்து போய்விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#cinema

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version