சமையல் குறிப்புகள்

பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம்

Published

on

தேவையான பொருட்கள்

அரிசி – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 4
பூண்டு – 4 பல்
பச்சைமிளகாய் – 4
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
முந்திரி – 20
சீரகம் – அரை டீஸ்பூன்
ஏலக்காய் – 2
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

தக்காளியைத் தனியாகவும், பூண்டு – பச்சைமிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, முந்திரி போட்டு தாளித்த பின்னர் பூண்டு – பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.

அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர், தக்காளி சாறை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் பிரியும்வரை கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

இப்போது சூப்பரான தக்காளி பிரியாணி ரெடி.

#lifestyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version