சினிமா

விஜய்க்காக களத்தில் இறங்குவேன்! – சீமான் அதிரடி

Published

on

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் பண்டிகை நாட்களில் தமிழ் படங்கள் ஆந்திராவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் சென்னை திருவொற்றியூரில் பேட்டியளித்தார். அதில், “ஆந்திராவில் ‘வாரிசு’ வெளியாகாவிட்டால் விஜய்க்காக களத்தில் இறங்கி போராடுவேன்” என்று பேசினார்.

#cinema

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version