அழகுக் குறிப்புகள்

முகத்தை பேரழிகியாக மாற்ற வேண்டுமா? கேரட்டை இப்படி பயன்படுத்துங்க

Published

on

கேரட்டை உடலுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணற்ற குணநலன்களை கொண்டிருக்கிறது. இதே போன்று அழகு குறித்த பராமரிப்பிலும் அதிக அளவு உதவுகிறது.

இதனை ஒரு சில பொருட்களுடன் பயன்படுத்து இன்னும் பல நன்மைகளை அள்ளத்தருகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.

  • கேரட் பாதிஅளவு இருந்தால் போதும் கேரட்டை விழுதாக மசித்து அதனுடன் சுத்தமான தேன் கலந்து இரண்டையும் நன்றாக குழைத்து கொள்ளவும். தேவையெனில் காய்ச்சாத பால் சிறிது விட்டு முகம், கழுத்து பகுதியில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், நிறம் உடனடியாக மறைவதை பார்க்கலாம்.
  • கேரட்- 1, பாசிப்பருப்பு – 5 டீஸ்பூன், இரண்டையும் பாதி நிலையில் வேகவைத்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் தயிர், பன்னீர், எலுமிச்சை சேர்த்து கலந்து முகத்துக்கும், கழுத்துக்கும் பேக் போட்டு நன்றாக காயும் வரை விட வேண்டும். முகத்தை இறுக்கி பிடிக்கும் அளவு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி எடுத்தால் முகம் பளிச் பளிச்.
  • கேரட்டை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி அதனுடன் சமளவு பன்னீர், கற்றாழை சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துகொள்ளுங்கள். முகம் சோர்வாக இருக்கும் போதெல்லாம் ஸ்ப்ரேவை முகத்தில் அடித்து பஞ்சால் துடைத்து எடுத்தால் முகம் புத்துணர்ச்சியாய் இருக்கும். குறிப்பாக வறண்ட சருமத்தை கொண்டிருப்பவர்களுக்கு கேரட் சாறு முகத்தில் அதிகப்படியான நன்மையை தரும்.
  • கண்களுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் இரவு படுக்கும் போது இந்த நீரை பஞ்சில் நனைத்து கண்களுக்கு கீழ் தடவி லேசாக மசாஜ் செய்தாலே கருவளையம் நீங்கும். கருமை நிறம் மறையும்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version