சினிமா

சூரியின் ஓட்டல்களில் திடீர் சோதனை! காரணம்என்ன ?

Published

on

சூரி மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஓட்டல்கள் நடத்தி வருகிறார்.

சூரிக்கு சொந்தமான ஓட்டல்களில் திடீரென வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நேற்று திடீரென வணிக வரித்துறை அதிகாரிகள் இந்த ஓட்டலில் சோதனை செய்ததாகவும் இந்த ஓட்டலுக்கு உணவு தயாரிக்க வாங்கும் பொருள்களுக்கு உரிய ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என்றும் புகார் வந்ததால் சோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் சோதனை செய்த அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றி இன்று காலை வணிகவரித்துறை அலுவலகம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உணவகத்தின் மேனேஜர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து இன்று அம்மன் உணவக மேலாளர் வணிகவரித்துறை அதிகாரிகள் முன் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#soori

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version