சமையல் குறிப்புகள்

கமகமக்கும் யாழ்ப்பாணத்து மீன் குழம்பு! எப்படி செய்யலாம்?

Published

on

கமகமக்கும் யாழ்ப்பாணத்து மீன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • வெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம்
  • உரித்து, கழுவி, வெட்டிய சிறிய வெங்காயம் – 100 கிராம்
  • கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் – 4
  • யாழ்ப்பாணத்துத் தூள் – காரத்துக்குத் தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • பழப்புளிக் கரைசல் – 1 கப்
  • தேங்காய்ப்பால் – முதற்பால் 1 கப் – 2 ம் 3ம் பால் ஒவ்வொரு கப்

செய்யும் முறை

  • ஒரு மண் சட்டியில் கழுவிய மீன் துண்டுகள், வெட்டிய சிறிய வெங்காயம் , பச்சை மிளகாய் போன்றவற்றைப் போடவும். சிலர் கருவேப்பிலையும் போடுவார்கள்.
  • பழப்புளிக் கரைசல், தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு, யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  • சேர்த்த கலவையை நன்றாகக் கலக்கவும். மண் சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும். அதிகம் நெருப்பும் தேவைப்படுவதில்லை.
  • குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிறந்து வரும்போது நற்சீரகம், மிளகு, உள்ளி ஆகியவற்றை இடித்துப் போடுவார்கள். இதனால் குழம்பு நன்றாக மணக்கும்.
  • பொதுவாக இவ்வாறே மீன் குழம்பு வைத்தாலும், இடத்துக்கு இடம் சில சில வேறுபாடுகளைக் காணமுடியும்.
  • மதிய நேரத்திற்கு பிரதான கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படுவதுடன், இரவு தயாரிக்கப்படும் புட்டுக்கும் பொருத்தமான கறியாக மீன் குழம்பு இருக்கும்.
  • முன்னரெல்லாம் அடுத்த நாள் காலையில் பழஞ்சோற்றுடனும் உண்ணப்படும் கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படும்.
  • மீன் கறி, மீன் குழம்பு போன்ற உணவுகளுக்கு ஒடியல் புட்டு மிகப் பொருத்தமானதாக இருக்கும்

#FoodRecipes

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version