அழகுக் குறிப்புகள்

வறண்ட சருமத்தை பொலிவாக மாற்ற வேண்டுமா? சில அழகு குறிப்புக்கள் இதோ

Published

on

பொதுவாக வறண்ட சருமம் என்பது நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

எனவே இந்த பிரச்சனை பெண்களுக்கு பெரிய தொந்தரவாக உள்ளது.

எனவே எளிமையான முறையில் சரும பிரச்சனையை சரி செய்யும் சில வழிமுறைகளை நாம் அறிந்து கொள்வோம்.

  • பாதி அவகாடோ எடுத்துக்கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். பின் இந்த கலவையை முகத்தில் தடவிக்கொண்டு 20 நிமிடங்கள் உலர வைக்கவும். இது சருமத்தை  மாய்ஸ்சரைஸ் செய்து மின்ன வைக்கும்
  • ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போய் சருமத்துக்கு பொலிவை ஏற்படுத்தும்.
  • தக்காளி சாறு, தேன், முல்தானி மட்டி போன்றவைகளை சேர்த்து கிரீம் போல் அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். வறண்ட சருமம் இதன் மூலம் பொலிவு பெறும்.
  • வாழைப்பழம், பப்பாளிப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவைகளை சேர்த்து அதில் அரை தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடர் சேர்த்து கிரீம் போல ஆக்கி முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள்.
  • ஓட்ஸ், பார்லி, சோயா மில்க் போன்றவைகளை சேர்த்து பேக் போடலாம். கேரட் சாறில் முல்தானி மட்டி பவுடர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.
  • பாலாடை, ஆப்பிள் இரண்டையும் சேர்த்து சருமத்தில் பூசுவதும் வறண்ட சருமத்துக்கு பொலிவை ஏற்படுத்தும்.
#SkinCare #Beauty Tips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version