அழகுக் குறிப்புகள்
தலைமுடி கருகருவென்று அடர்த்தியாக வளர வேண்டுமா? சூப்பரான குறிப்பு இதோ
முடி கருகருவென்று அடர்த்தியாக சில இயற்கை பொருட்கள் பெரிதும் உதவுகின்றது.
தற்போது வீட்டில் இருந்தப்படியே தலைமுடியை கருகருவென வளர செய்ய என்ன மாதிரியான வழிகளை பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- கருஞ்சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
- நெல்லிக்காய் – 3
செய்முறை
முதலில் கருஞ்சீரகம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்து நன்கு சுத்தம் செய்து கழுவி, இதை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.
பின்னர் மறுநாள் காலையில் ஊறிய கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை தண்ணீரை வடிகட்டி விட்டு எடுத்து, மூன்று பெரிய நெல்லிக்காய்களை சேர்த்து, நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைக்கும் போது தண்ணீர் தேவைப்படும் பொழுது நீங்கள் சீரகம், வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
You must be logged in to post a comment Login