சினிமா

சினிமா தயாரிப்பாளர் கொலை! திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Published

on

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை மதுரவாயல் என்ற பகுதியை அடுத்த சின்மயா நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது சடலம் அந்த பகுதியில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு சாலையில் வீசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை செய்த போது கொலை செய்யப்பட்ட பாஸ்கரன் லக்ஷ்மி கரண் எண்டர்பிரைசஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி ராம்கி நடித்த ‘சாம்ராட்’ மற்றும் ’ஒயிட்’ ஆகிய படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் பாஸ்கரன் நேற்று காரில் வீட்டில் இருந்து சென்ற நிலையில் அவர் திரும்பி வரவில்லை என்று அவரது மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

அப்போது சாலையோரம் பிளாஸ்டிக் பையில் வீசப்பட்ட பிணத்தை கண்டு பிடித்ததை அடுத்து அவரது மகன் தனது தந்தையின் உடல் தான் என்பதை உறுதி செய்தார்.

இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலீசார் இறங்கியுள்ளனர்.

இச்சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#Cinema

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version