அழகுக் குறிப்புகள்

மழைக்காலத்தில் சரும அழகை பேண…..

Published

on

இயற்கை பொருட்கள் பாதுகாப்பானவை, எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாததால், அனைத்து வயதினரும் சற்றும் அச்சம் கொள்ளாமல் பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் குறைபாடற்ற அழகான சருமத்தைப் பெற உதவும் சில இயற்கை பேஸ் பேக்குகள் உங்களுக்காக

 


* முதலில் ஒரு பௌலில் ரோஸ் வாட்டர் சிறிது எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சிறிது ஆரஞ்சு தோல் பவுடர், துவரம் பருப்பு பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.

* இறுதியாக குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அப்படியானால் திறந்துள்ள சருமத் துளைகளை சுருக்குவதற்கு ஒரு அற்புதமான ஃபேஸ் பேக் உள்ளது.

* தக்காளியை துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் உள்ள ப்ரீசரில் வைக்க வேண்டும்.

* பின் அந்த உறைய வைக்கப்பட்ட தக்காளி துண்டுகளால் தினமும் சருமத்தை மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உங்கள் சருமத்தை மென்மையாக்க விரும்பினால் இந்த ஃபேஸ் பேக் பெரிதும் உதவியாக இருக்கும்.

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதில் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* அதன் பின் அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.

* இறுதியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version