அழகுக் குறிப்புகள்

பொடுகு தொல்லையா? இதனை போக்க இதோ சூப்பரான 5 டிப்ஸ்

Published

on

பொதுவாக முடியின் சுத்தமின்மை, தூசு, ஹார்மோன்கள், அதிக கெமிக்கல் ஷாம்பு போன்ற பல காரணங்களால் பொடுகு பிரச்சனை வருகின்றது.

பொடுகுப் பிரச்சனை உருவாவதற்கு முக்கியமான காரணம் உங்கள் தலையில் நீர்ச்சத்து இல்லாததால் இருக்கலாம். இவை மிக வறண்டு போய் இருப்பதன் விளைவாக கிருமிகள் உருவாகி தலையில் பொடுகினை உருவாக்குகின்றன. இவை தலையில் தேங்குவது ஆரோக்கியமான விஷயம் இல்லை .

இவற்றை எளியமுறையில் கூட நீக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  1. சின்ன வெங்காயம்கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15 நிமிஷம் கழித்து குளிக்கனும். பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
  2. எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறில் பஞ்சை நனைத்து தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பொடுகை நீக்க உதவும்.
  3. தேங்காய் எண்ணெய்யுடன் வேப்ப எண்ணெய் கலந்து தடவலாம். வேப்ப எண்ணெய்யில் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளதால் பொடுகை நீக்க உதவும்.
  4. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும். வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்.
  5. வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தேய்கலாம். தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version