அழகுக் குறிப்புகள்

தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க! சருமம் கண்ணாடி மாதிரி ஜொலிக்குமாம்

Published

on

சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தவிர்த்து, உங்கள் சருமத்தை வறட்சியின்றி, ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், சில காய்கறிகளின் சாறு நமக்கு உதவுகின்றது.

இவற்றை ஏதானும் தினமும் காலையில் எடுத்து கொள்வது நன்மையே தரும்.

அந்தவகையில் சருமத்தை எளிய முறையில் ஜொலிக்க செய்ய என்ன மாதிரியான காய்கறிகளின் சாறுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

  • பீட்ரூட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது நம் சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கி, இயற்கையான பொலிவைக் கொடுக்கும் போது உங்கள் சருமத்தின் நிறத்தை சீராக்க உதவுகிறது.
  • வெள்ளரிக்காய் சாறு சருமத்தில் ஏற்படும் குறைபாட்டைப் போக்கி, வறட்சி இல்லாமல் நீரேற்றமாக வைத்திருக்க உதவும்,
  • தினமும் காலையில் இந்த தக்காளி ஜூஸ் குடிப்பது முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. முகத்தில் உள்ள குழிகளை மாற்றுகிறது. அதோடு எண்ணெய் சருமத்தில் சருமத்தின் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது.
  • சுரைக்காய், புதினா இலைகள், நெல்லிக்காய், இஞ்சி மற்றும் கல் உப்பு தேவை. அனைத்தையும் ஒன்றாக அரைத்து ஜூஸ் எடுத்து வடிகட்டிய பின் உடனே குடிக்கவும். தேவைப்பட்டால் சுவைக்கு ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • முட்டைக்கோஸ், வெள்ளரி மற்றும் மாம்பழம்  எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கிக் குடிக்கவும், குடித்து முடித்த பின், புத்துணர்ச்சியூட்டும் உங்கள் சருமம் கண்ணாடி போன்று பளபளப்பாக மின்னும் அதை நீங்களே உணர முடியும்.

#beautytips #skincare 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version