சினிமா

திருமணம் செய்து கொள்ளாதது ஏன் ? சுஷ்மிதா சென் பதிலால் அதிர்ச்சி

Published

on

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் 1997-இல் வெளியான ‘ரட்சகன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

பிறகு ‘முதல்வன்’ படத்தில் ‘சக்கலக்க பேபி’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில் முதன் முதலாக பிரபஞ்ச அழகி படத்தை வென்றவர்.

இவர் 2000-ஆம் ஆண்டில் ரேனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019-ல் அலிசா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். இவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை மட்டும் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பதற்கு சுஷ்மிதா செனின் பதிலால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதில் அவர் கூறியதாவது:- “அதிர்ஷ்டவசமாக சில சுவாரசியமான ஆண்களை நான் சந்தித்து உள்ளேன். அதுமட்டுமல்லாமல் அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்து விட்டேன்.

ஆகையால் தான் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் மூன்று முறை எனக்கு திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு வந்தது.

ஆனால் கடவுள் என்னை காப்பாற்றி விட்டார். அதேபோல அந்த கடவுள் தான் இந்த இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

தற்போது இது சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

 #CinemaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version