சினிமா

பிரதமருடன் செல்பி எடுத்து கொண்ட தமிழ் நடிகை! இணையத்தில் வைரலான வீடியோ

Published

on

பாரத பிரதமர் நரேந்திர மோடியை தற்போது ஐதராபாத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இதன்போது ஐதராபாத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் கிளம்பிச் செல்லும்போது நடிகையும் அமைச்சருமான ரோஜா பிரதமரிடம் செல்பி எடுக்க அனுமதி கேட்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். மேலும் இந்த செல்பியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 #roja  #narendramodi

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version