சினிமா
சூர்யாவுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் அமைப்பு.! உச்சக்கட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்
ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஆஸ்கர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய நடிகையான கஜோலும் ஆஸ்கர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருப்பதில் இந்தியாவைச் சேர்ந்த திரையுலகப் பிரபலங்களில் சூர்யா மற்றும் கஜோலின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கஜோலுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. மற்றும் அவரின் ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.
தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்கர் பேனலுக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
You must be logged in to post a comment Login