சினிமா

புதிய சர்ச்சையில் சிக்கிய தனுஷ்! என்ன தெரியுமா?

Published

on

பிரபல நடிகரான தனுஷ் தற்போது புதிய சர்ச்சையில் ஒன்றில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷும் அனிருத்தும் கூட்டணி அமைத்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி என்ற பாடலை நடிகர் தனுஷே எழுதி பாடியுள்ளார்.

சமீபத்தில் இந்தப் பாடலின் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியாகி யூட்யூப்பில் ட்ரெண்டாகி வருகிறது.

தற்போது சர்ச்சையில் சிக்கியது இந்தப் பாடல்தான். ஏனெனில் தாய்கிழவி பாடல் வயதானவர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தனுஷுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் பாடல் எழுதி பாடி தவறான முன் உதாரணமாகியுள்ளார் என்றும் வயதானவர்களை அவமதிக்கும் வரிகளை பாடலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பால் முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தாய் கிழவி பாடலில் வயதானவர்களை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடலின் வரிகள் வேடிக்கையாக இருந்தாலும் மூத்தவர்களை தவறாக அழைக்கும் எண்ணத்தை விதைக்கும் வகையில் உள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி தனுஷுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விவாகரத்து சம்பந்தமான சர்ச்சைகளில் சிக்கி கொண்டுள்ள தனுஷு ற்கு தற்போது இது புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#CinemaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version