சினிமா

அன்புள்ள தங்கமே! – நயனுக்காக உருகிய விக்னேஷ் சிவன்

Published

on

காதலி நயனுக்காக உருகி இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி நேற்று முன்தினம் திரைக்கு வந்த திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’.

முதல்நாளே படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், இயக்குநனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இந்த பதிவில்,

‘அன்புள்ள தங்கமே! இப்போது நீ என் கண்மணி! என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருந்து வருவதற்கு நன்றி. நீ எனக்கு முதுகில் தட்டிக் கொடுப்பதே ஒரு இனிமை. நீ எனக்காக இவ்வளவு அழகாய் இருக்கிறாய். ஒவ்வொரு முறையும் நான் என் வாழ்வில் தாழ்வாக உணரும்போதும நீ என்னுடன் இருந்து இருக்கிறாய், நீ என்னுடன் நின்ற விதம், என்னை முடிவுகள் எடுக்க வைத்தது மற்றும் நீ எவ்வளவு எனக்கு உறுதுணையாக இருந்தாய் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது

என்னையும் என் படத்தையும் முழுமைப்படுத்தியது நீ தான். இந்த படத்தின் வெற்றி உனது வெற்றி. இன்று நீ திரையில் ஜொலிப்பதை காணவும், மீண்டும் உன்னை இயக்கி உன்னிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்கு ஒரு இயக்குனநராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது

என்னையும் என் படத்தையும் முழுமைப்படுத்தியது நீ தான். இந்த படத்தின் வெற்றி உனது வெற்றி. இன்று நீ திரையில் ஜொலிப்பதை காணவும், மீண்டும் உன்னை இயக்கி உன்னிடமிருந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்கு ஒரு இயக்குநராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது’ என பதிவிட்டுள்ளார்.

#Cinema

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version