சினிமா

தேவரகொண்டாவுடன் காஷ்மீரில் பிறந்தநாள் கொண்டாட்டம்! – வாழ்த்து மழையில் சமந்தா

Published

on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகை சமந்தா இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமந்தாவின் பிறந்தநாளை ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் சமந்தா.

சென்னை பெண்ணான சமந்தா ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் அறிமுகமானார். பின்னர் அதர்வா முரளியுடன் இணைந்து ‘பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் விஷால், சிவகார்த்திகேயன் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். புஷ்பா படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர். தற்போது சமந்தா நடிப்பில் ’சாகுந்தலம்’ ’யசோதா’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

இதேவேளை, பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா காஷ்மீரில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய திரைப்படத்தில் நாயகியாக சமந்தா நாயகியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பின்போதே தேவரகொண்டா உள்பட படக்குழுவினருடன் சமந்தா கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

#Cinema

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version