பொழுதுபோக்கு

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி

Published

on

அதிகளவிலான டிஆர்பி யைப் பெற்றுவந்த பாரதி கண்ணம்மா சீரியலின் நடிகை ரோஷினி ஏராளமான ரசிகர்களின் அன்பை பெற்றவர். நிறைய பெண்களின் ரோல் மொடலாகவே ரோஷினி மாறிவிட்டார் என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி திடீரென சீரியலில் இருந்து விலகியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. அந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய எபிசோடில் வினுஷா, கண்ணம்மா பாத்திரத்தில் நடித்த காட்சிகள் வெளியானது.

தற்போது ரோஷினி முதல் முறையாக பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகியதற்கான காரணத்தை விளக்கி வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது ” நான் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். உங்கள் ஆதரவு இன்றி என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.தொடர்ந்தும் இந்த ஆதரவினை தருவீர்கள் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

#Cinema

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version