பொழுதுபோக்கு

எனக்கு போட்டி நான் தான்! – வைகைப்புயல்

Published

on

எனக்கு போட்டி நான் தான்! – வைகைப்புயல்

வைகைப்புயல் வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தற்போது ‘நாய் சேகர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், “எல்லா பிரச்சினைகளையும் கடந்து நாய் சேகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் சாதித்துவிட்டேன் என நான் நினைக்கவில்லை. இன்னும் சாதிக்க எவ்வளவோ இருக்கிறது. இன்னும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியும் உள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். எல்லோரையும் சிரிக்க வைப்பது எனக்கு பிடித்து இருக்கிறது.”

“குழந்தைகள் என்னைப்போல் பாவனை செய்வதை கடவுள் கொடுத்த வரமாகவே பார்க்கிறேன். சினிமாவில் எனக்கு போட்டி நான் தான். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் முந்தைய கதாபாத்திரத்தைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என்று உழைப்பேன். இனிமேல் சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறேன்”

“சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலிகணக்குகள் உள்ளன. வலைத்தளத்தில் எனது பெயரில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் போலியானவை” என்றும் தனது பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டபோது தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version