ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (06.05.2022)

Published

on

Medam

பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள்.கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன் படுத்துவீர்கள்.உறவினர்கள் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள்.

சகதொழிலாளர்களிடமும் நட்பை வளர்த்து சாதகம் அடைவீர்கள்.மாமனார் வீட்டில் இருந்த மனத்தாங்கலை புத்திசாலித்தனத்தால் அகற்றுவீர்கள்.

நடைபாதை வியாபாரிகள் முன்னேற்றம் காண்பார்கள்.

 

 

Edapam

உங்களை வீழ்த்த தொழில் எதிரிகள் திட்டம் தீட்டுவார்கள். சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

அலைச்சலுக்குத் தகுந்த பலனை அனுபவிப்பீர்கள்.நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.

உடன்பிறப்புக்களின் உதவி கிடைக்காது.வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தை விருத்தி செய்தீர்கள். விலை ஏற்றத்தால் பூ விற்பனை சற்று இறக்கமாக இருக்கும்.

 

Mithunam

தேவை இல்லாமல் வாக்குக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் பகைவரும்.

மனைவி சொல்லும் ஆலோசனையைக் காது கொடுத்து கேளுங்கள். அரசாங்கப் பைல்களில் கையெழுத்துப் போடும் போது கவனம் தேவை.

வேலை ஆட்கள் பற்றாக்குறையால் தொழிலில் சிரமம் உண்டாகும். பணப் பற்றாக்குறை நிலவும்.

 

                                                                                          Kadakam

ரியல் எஸ்டேட் தொழிலில் மந்தநிலை காணப்படும். வெளியூர் பயணங்களில் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள்.

உதவி கேட்டு வருபவர்களின் சிரமத்தைப் போக்குவீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள்.

வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும்.

மேலதிகாரிகள் உங்களின் செயலை வெகுவாகப் பாராட்டுவார்கள். பெட்டிக் கடை வியாபாரிகள் ஓரளவு லாபம் பார்ப்பார்கள்.

போட்டி பந்தயங்கள் உங்களுக்குச் சாதகமாக அமையும். குடும்பத்தினர் உங்கள் மனம் நோகாமல் நடந்து கொள்வார்கள்.

நண்பர்களோடு உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள். சிக்கலான நேரங்களில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.

 

                                                                                                            Kanni

வியாபாரத்தில் புதுமையான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தொழிலுக்காக தேவைப்பட்ட பணம் கைக்கு வந்து சேரும்.

கட்டிடத் தொழிலில் இருப்பவர்கள் ஓய்வின்றி வேலை பார்ப்பார்கள். இல்லாதவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் புகழும் அந்தஸ்தும் உயரும்.

விருந்தினர்கள் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும். சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

                 

                                                                                                                                                   

                                                                                         Thulaam

அடுத்தவர்களின் பாராட்டைப் பெறுவதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். கூலி வேலை பார்ப்போர் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து குதூகலம் அடைவார்கள்.

தந்தையார் மூலம் பணவரவு உண்டாகும். வெளிநாடு செல்லும் எண்ணத்திற்கு விதை போடுவீர்கள்.

கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். முன்பிருந்த மனக்கவலை நீங்கும்.

 

                                                               

                                                                                                     Viruchchikam

வேலை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் போடுவதை நிறுத்தி வையுங்கள். வாகனங்கள் ஓட்டும்போது செல்போனில் பேசாதீர்கள்.

வெளியூரில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தி தாமதம் ஆகும் . கடன் பிரச்சனையால் தலை குனிவு ஏற்படலாம்.

சகோதர உறவுகளால் சங்கடங்கள் வந்து சேரும்.உணவுக் கட்டுப்பாடு முக்கியம்.சந்திராஷ்டம காலம். பொறுமை தேவை.

 

 

Thanusu

துவண்டு கிடந்த தொழிலை தூக்கி நிறுத்துவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த வேலை நடக்கும். சிறு வியாபாரிகள் சீரான லாபத்தைப் பெறுவார்கள்.

கடன் பிரச்சினை கட்டுக்குள் அடங்கி இருக்கும். இரும்புத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். கரும்பு ஜூஸ் கடையினர் கணிசமான லாபம் அடைவார்கள்.

 

Maharam

மூச்சுவிட முடியாத அளவுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கடின உழைப்பால் அதிகாரிகளை திருப்திப்படுத்துவீர்கள்.

உடன் வேலை செய்பவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பீர்கள். சிறிய வியாபாரிகள் கடன் கொடுப்பதில் கண்டிப்புக் காட்டுங்கள்.

காய்கறி வியாபாரிகள் கணிசமான லாபம் பார்ப்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

 

Kumbam

பூர்வீகச் சொத்துக்களை விற்க தடை ஏற்படும்.குழந்தைப் பாக்கியம் இல்லை என்று தவிக்கும் குடும்பத்தில் சந்தான விருத்தி ஏற்படும்.

குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உங்களுக்கு எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சிகள் முனை மழுங்கிப் போகும். வேலை இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

அரசாங்கத்திலிருந்து திருப்தியான தகவல் வரும். வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்துப் போடாதீர்கள்.

 

Meenam

 

சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் உண்டாகும். தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்களில் ஏற்றம் ஏற்படும்.

பரம்பரைச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு கூடும்.தோப்பு குத்தகை மூலம் வருமானம் கிடைக்கும். போட்டி பந்தயங்கள் சாதகமாக முடியும்.

ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் முன்னேற்றம் காணும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

#Astrology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version