ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (20.09.2021)

Published

on

Meedam

பணியிடத்தில் சிறப்பாக செயற்படுவீர்கள். கணவன் – மனைவி இடையே அன்னியோன்யம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். புதிய முயற்சிகள் சாதமாக அமையும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படும். பேசும்போது பொறுமையைக் கடைப்பிடியுங்கள். சகோதரர்கள் ஆலோசனை செய்வர்.

 

                                                                Edapam

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம். எதிர்பாரா செலவுகள் தடைப்படும். எடுத்துக்கொண்ட அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்த்தல் நன்று. புதிய முயற்சிகளை தவிருங்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாரா லாபம் வந்து சேரும். சிரமங்கள் குறையும்.

 

Mithunam

புது முயற்சிகளை தொடங்குவது நன்று. வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். வியாபாரத்தில் சங்கடங்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விட்டுக்கொடுத்து, அனுசரித்துப் போங்கள். மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். இளைய சகோதரர்களால் மகிழ்ச்சி கிட்டும்.

 

Kadakam

திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தெய்வப் பிரார்த்தனை மூலம் மனதுக்கு அமைதி உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடியுங்கள். நன்மை உண்டாகும் நாள். பெண்கள் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.  பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

 

Simmam

தொழிலில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். துர்க்கை அம்மன் வழிபாடு மகிழ்ச்சியை உண்டுபண்ணும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். சகோதர வழியில் நன்மை உண்டாகும். குடும்பத்தில் நடைபெறும் சில நிகழ்வுகள் சஞ்சலத்தை உண்டு பண்ணலாம். வீண்வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

 

Kanni

வியாபாரத்தில் தடைகள் ஏற்படினும் உங்கள் முயற்சியால் தடை நீங்கும். திடீர் செலவுகள் வந்துபோகும். தொழிலில் வழமை போன்ற லாபம் கிடைக்கும். அமைதியைக் கடைப்பிடியுங்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு வந்து சேரும். பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவுகளை எட்டுதல் நன்று. உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

 

Thulaam

பணவரவு சரளமாக இருக்கும். திட்டமிட்டு செயற்படுவீர்கள். தொழில் தொடர்பாக மனநிறைவை தரக்கூடிய செய்தி கிடைக்கும். எதிர்பாரா உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

 

Viruchchikam

சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆடம்பர செலவுகள் உண்டாகும், வீண் செலவுகள் கட்டுப்படும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான நாளிது. தொடங்குகின்ற காரியங்கள் வெற்றிகரமாக நிறைவுறும். எதிர்பாராத பணவரவுகள் வர வாய்ப்புண்டு. சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். தொழிலாளர்களின் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

 

Thanusu

சுபநிகழ்வுகள் எதிர்பார்த்தபடி நடக்கும். பணவரவு மனநிறைவைத் தரும். முயற்சிகளில் முன்னேற்றத்தை காண்பீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களுக்காக பாடுபடுவீர்கள். பொறுப்புக்களை பகிர்ந்தளித்து ஆறுதல் பெறுவீர்கள்.

 

Maharam

புது முயற்சிகளை ஆரம்பிக்கும் போது நிதானத்துடன் செயற்படுதல் நன்று. உடல் ஆரோக்கியம் சிறக்கும். உங்கள் முயற்சி வீண் போகாது. புது முயற்சிகள் சாதமாக அமையும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். வாழ்க்கைத் துணையால் அன்பு கிட்டும். பிள்ளைகள் மேல் கவனம் தேவை.

 

Kumbam

உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் வெற்றிபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் வெற்றிபெறும்.பிள்ளைகளால் மனா நின்மதி கிடைக்கும், தெய்வ பக்தி மேலோங்கும். நீண்ட நாள் தடைப்படட காரியம் வெற்றி பெறும். கணவன் – மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

 

Meenam

பொறுமையாக இருப்பது அவசியம். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள். இறைவழிபாடு இடையூறுகளை நீக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சகோதர வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version