ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (17.09.2021)

Published

on

Medam

மனதில் சோர்வு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். நண்பர்கள் தேவையறிந்து உதவுவர். வாழ்க்கையின் ஆதரவு கிடைக்கும். குடும்ப சூழ்நிலை நிம்மதியை உண்டுபண்ணும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தாமதப்படுத்துங்கள். நிதானத்துடன் செயற்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Edapam

கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். உடல் நல பிரச்சினைகள் தோன்றும். நெருங்கிய உறவினர்களால் நன்மை உண்டாகும். செலவுகள் ஓரளவு கட்டுக்குள் வரும். ஓய்வில்லா உழைப்பு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். பொறுப்புள்ள பதவி உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு வெற்றிக்கு வழிவகுக்கும். சிறு சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் உங்கள் முயற்சியால் இலக்கை அடைவீர்கள்.

Mithunam

பொறுமை இழக்காதீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வருமானம் போதிய அளவு இருக்கும். சோதனை நீங்கி சாதனை பெற வழிவகுக்கும். மனதில் குழப்பங்கள் உண்டாவதை தவிர்த்தல் நன்று. தெய்வ வழிபாட்டால் அமைதி உண்டாகும். சாதக போக்கு தென்படும்.சுபநிகழ்ச்சிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

Kadakam

சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய நாள். செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பொறுமையும் அவசியம். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். எதிர்பாரா பல நன்மைகள் தேடி வரும். உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியிடத்தில் நற்பெயர் தோன்றும்.

                                                                                                      Simmam

போட்டிகள் குறையும். சிறுசிறு முயற்சிகள் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். வெளியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மந்த நிலைமாறி சுறுசுறுப்பு உண்டாகும். ஏற்பட்ட தடங்கல்கள் விலகி வெற்றிக்கு வழிவகுக்கும். உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

Kanni

எதிர்பார்க்கும் லாபம் அதிகரிக்கும். பொறுமை, நிதானம் கடைப்பிடிப்பது அவசியம். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் இடம்பெற்று நீங்கும். விபரீத பிரச்சினைகள் உண்டாகாது. மன அமைதி சிறிது பாதிக்கப்படும். பணவரவு அதிகரிக்கும். உறவுகளுடன் பொறுமையை கடைப்பிடிக்கவும். பணியிடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

Thulaam

சங்கடங்கள் நீங்கும். திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கடன் விடயத்தில் கவனமான நடந்து கொள்ளுங்கள். சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீஙங்கும். தொழில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். மற்றவர்களுடன் நிதானத்துடன் பேசுங்கள். செலவு ஏற்பட வாய்ப்புண்டு.

Viruchchikam

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மனதில் உறுதி ஏற்படும். கடன்களில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். உடல்நலன் மேம்படும். மனதுக்கு உற்சாகம் பிறக்கும். இன்று நன்மைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. வெளியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். எதிர்பாரா பணவரவு உண்டாக வாய்ப்புண்டு. போட்டிகள் குறையும்.பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கும். கணவன் மனைவியிடையே அன்பு நிலவும்.

Thanusu

உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வீண் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாக வாய்ப்புண்டு. கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் உண்டாகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்று. எதிர்பாரா நல்ல தகவல்கள் கிடைக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நன்று.

Maharam

 

 

புதிய முயற்சிகள் இழுபறியானாலும் சாதகமாக முடிந்துவிடும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பாரா பண வரவு கிடைக்கும். பேசும்போது பொறுமை அவசியம். முக்கிய முடிவுகளை பல தடவைகள் யோசனை செய்து மேற்கொள்வது நன்று. மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். உழைப்புக்கேற்ற இலாபம் உண்டாகும். எந்த நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

Kumbam

தொழிலில் வருமானம் திருப்திகரமான அமையும். மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய முயற்சிகள் பெற்றி பெறும். உத்தியோகத்தில் திருப்திகரமாக பொறுப்புக்களை நிறைவேற்றுவீர்கள். இறைபக்தி மேலோங்கும். பொருளாதார நிலை சீர்படும். வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வீர்கள். ஆதாயம் உண்டாகும். போட்டிகளை சமாளிக்க கடுமையாக பாடுபடுவீர்கள்.

Meenam

அதிக முயற்சி உழைப்புக்கு வழிவகுக்கும். எதிரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்படும். உத்தியோகத்தில் கவனம் தேவை. அயலவர்களுடன் வீண்வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சுபநிகழ்ச்சிகள் உண்டாகும். முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் அறிவுரையை பின்பற்றவும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version