ஆன்மீகம்

அதிர்ஷ்டம் வீடு தேடி வரனுமா? இந்த சிலைகளை வீட்டில் வைச்சாலே போதும்

Published

on

பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தின் படி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் சில சிலைகள் வீட்டில் வைத்திருந்தால், வீட்டினுள் நேர்மறை ஆற்றல் நிறைந்து, வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையான புதிய வழிகள் திறக்கப்படும்.

அந்தவகையில் நல்ல அதிர்ஷ்டத்திற்கு வீட்டில் வைக்க வேண்டிய வாஸ்து சிலைகள் குறித்து காண்போம்.

  • யானை சிலையை வைத்திருக்கும் வீட்டில் லட்சுமி தேவி குடியிருப்பாள். அதுவும் வெள்ளை அல்லது பித்தளையால் ஆன யானை சிலையை வீட்டில் வைத்திருந்தால், பணம் தொடர்பான பிரச்சனை நீங்குவதோடு, வீட்டுச் சூழலும் அமைதியாக இருக்கும். குறிப்பாக இது வீட்டில் உள்ள ராகு தோஷம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்கும்.
  • வீட்டில் ஆமை சிலையை வைத்திருப்பதும் நல்லது. ஆமை விஷ்ணுவுடன் தொடர்புடையது என்பதால், ஆமை சிலையை வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் வைத்திருக்க வேண்டும். ஆனால் ஆமை சிலையை வீட்டில் வைக்க வேண்டுமானால், அது சில உலோகத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனால் வீட்டில் அமைதியும் செழிப்பும் ஏற்படும்.
  • மீன் சிலையை வீட்டின் வடகிழக்கு திசையை நோக்கி எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் விளைவாக வீட்டின் வருமானம் அதிகரிக்கும் மற்றும் குடும்பத்தில் உள்ளோர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பார்கள்.
  • குதிரை சிலையை தெற்கே வைப்பதால் அது பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக குதிரை சிலையை வைக்கும் போது, சிலையானது ஏதாவது கதவி அல்லது ஜன்னலை பார்த்தவாறு இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் மற்றும் அதிர்வுகளை உருவாக்க உதவுகிறது.
  • சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்திருந்தால், அந்த புத்தரின் ஆவி வீட்டில் ஒரு மங்களகரமான மற்றும் நேர்மறையான ஆற்றலை உருவாக்கும். அதுவும் தங்க முலாம் பூசப்பட்ட சிரிக்கும் புத்தர் சிலையை வைத்திருப்பதே நல்லது. சொல்லப்போனால் இது ஒரு சிறந்த பரிசுப் பொருளும் கூட.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version