அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

Share

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சசை நடத்தின.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் முதல் பாதியில் சமநிலையில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணியின் கார்டன் 55 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, அர்ஜென்டினா அணியின் என்சோ பெர்னாண்டஸ், லடாரோ மார்டினஸ் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதனால் போட்டியின் நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றியை பதிவு செய்து, அர்ஜென்டினா அணி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபுறம், தோல்வியடைந்த இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணியை சந்திக்க காத்திருக்கிறது.

Share
தொடர்புடையது
gseui7olytm.hg
விளையாட்டு

இலங்கை அணி தொடர்பில் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுனில் கவாஸ்கர்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறவுள்ள தீர்மானமிக்க இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக,...

LPL கிரிக்கெட்
விளையாட்டு

LPL கிரிக்கெட் போட்டிக்கு இலவச நுழைவு வசதி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இன்று, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள லங்கா LPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப்...

Team India Have Arrived In Sri Lanka
விளையாட்டு

இலங்கை வந்தடைந்தது இந்திய அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக...

Rumesh Tharanga
விளையாட்டு

வரலாற்று சாதனையுடன் இலங்கைக்கு கிடைத்த தங்கம்.

இலங்கை வீரரான ருமேஷ் தரங்க , கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில்,...