ஏனையவை

தனியார் துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளரின் மகிழ்ச்சி தகவல்

Published

on

தனியார் துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளரின் மகிழ்ச்சி தகவல்

தனியார் துறை ஊழியர்களிற்கு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (National People’s Power) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஒய்வுபெற்ற பலர் அவலம் நிறைந்த துன்பகரமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும்.

நாட்டின் உற்பத்திக்கு தனியார் துறையினர் பெரும் பங்களிப்பு செய்கின்றனர், எவரும் இத்தனை வயது வரை தான் வேலை செய்யவேண்டும் என்ற ஒரு விடயம் உள்ளது.

ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும்.

தனியார் துறை ஊழியர்களிற்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்று எங்களிடம் உள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version