இலங்கை

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு

Published

on

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு\

மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற ஸார்ப் நிறுவனமானது கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் முப்பது இலட்சத்து பதினாறாயிரத்து அறுநூற்று எண்பத்தொரு சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து அறுபத்தாறாயிரத்து இருநூற்று முற்பததெட்டு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (sarp)மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தச்சடம்பன் அம்பகாமம் ஒழுமடு மற்றும் மாங்குளம் கொக்காவில் பகுதியிலும் ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பு மேற்கு கிழக்கு மண்ணாகண்டல் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் முப்;பது இலட்சத்து பதினாறாயிரத்து அறுநூற்று எண்பத்தொரு சதுரமீற்றர் பரப்பளவில் (301668) இருந்து அறுபத்தாறாயிரத்து இருநூற்று முற்பததெட்டு (66238) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு ஒழுமடு மாங்குளம் கொக்காவில் மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Exit mobile version