ஏனையவை

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவித்தல்

Published

on

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவித்தல்

நாட்டிலுள்ள பதினொரு பாடசாலைகளை இன்று (18ஆம் திகதி) முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அனுராதபுரம்(Anuradhapura)- மிஹிந்தலை(Mihintale) மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

எதிர்வரும் பொசன் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளியூர்களில் இருந்து விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வரும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் தேசிய பொசன் விழாக் குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன ஆகியோர் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய அந்தப் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

Exit mobile version