ஏனையவை
தாஜ்மஹால் முன் அமர்ந்து மாஸாக யோகா போட்டோ ஷுட் நடத்திய இளம் நடிகை- யார் தெரியுமா?
தாஜ்மஹால் முன் அமர்ந்து மாஸாக யோகா போட்டோ ஷுட் நடத்திய இளம் நடிகை- யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தாண்டி ஒரு விஷயத்தில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஒரு படம் நடித்துவிட்டால் போதும் உடனே வெளிநாடு பறந்து விடுகிறார்கள்.
அங்கு எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவதோடு வித்தியாசமான உடை அணிந்து நாம் படங்களில் பார்த்த நடிகையா இது வெளிநாட்டில் இப்படி உள்ளார் என ரசிகர்களை புலம்ப வைத்துவிடுவார்கள்.
அப்படி இப்போது ஒரு நடிகை தாஜ்மஹால் சென்று அங்கு யோகா செய்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
2017ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். அதன்பின் கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் வேறுயாரும் இல்லை நடிகை அதுல்யா ரவி தான். தாஜ்மஹால் அருகே அவர் தரையில் உட்கார்ந்து யோகா செய்யும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.