உலகம்

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சோப்பு தண்ணீரால் நேர்ந்த சோகம்

Published

on

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சோப்பு தண்ணீரால் நேர்ந்த சோகம்

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சோப்பு தண்ணீரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, குளத்தூர் அருகே உள்ள கீழமேடு அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் கமலேஷ் (23). இவருக்கு திருமணமான நிலையில் 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், கடந்த 22 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடைபெற்ற நாளில் வீட்டை சுத்தம் செய்வதற்காக ஒரு வாளியில் சோப்பு தண்ணீரை கமலேஷ் வைத்திருந்தார். அந்த வாளியை எதிர்பாராதவிதமாக கமலேஷின் 2 வயது மகன் தட்டி விட்டார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக 22 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையின் மீது சோப்பு தண்ணீர்கொட்டியது. பின்னர், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், குழந்தை வரும் வழியிலே உயிரிழந்து விட்டது.

இதுகுறித்து மண்டையூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்பு வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version