Connect with us

ஏனையவை

சர்ச்சையில் சிக்கியுள்ள பிரித்தானிய இளவரசர்: பொலிசார் எடுத்துள்ள முடிவு

Published

on

R 9

சர்ச்சையில் சிக்கியுள்ள இளவரசர் ஆண்ட்ரூ மீது விசாரணை துவக்கவேண்டும் என லண்டன் பொலிசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது விசாரணை மேற்கொள்ள பொலிசார் மறுத்துவிட்டனர்.

பிரித்தானிய இளவரசரும், மன்னர் சார்லசின் தம்பியுமான ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கிய அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் அளித்த விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீவின் கூட்டாளியும் காதலியுமான கிஸ்லேன் மேக்ஸ்வெல் என்னும் பெண், இந்த பெண்களை பிரபலங்களுக்கு விருந்தாக்க அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

இளவரசர் ஆண்ட்ரூ எப்ஸ்டீன் மாளிகையில் விருந்தில் கலந்துகொண்டபோது, இந்த கிஸ்லேன், Jane Doe 3 என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விர்ஜினியா என்னும் (Virginia Giuffre) இளம்பெண்ணிடம், இளவரசர் ஆண்ட்ரூவுடன் பாலுறவு கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஆண்ட்ரூ என்னவெல்லாம் ஆசைப்படுகிறாரோ, அதையெல்லாம் அவருக்கு செய்யவேண்டும் என எப்ஸ்டீன் விர்ஜினியாவுக்கு அறிவுறுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆக, விர்ஜினியாவுடன் மூன்று இடங்களில் வைத்து ஆண்ட்ரூ பாலுறவு கொண்டதாக, நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அப்போது விர்ஜினியாவுக்கு வயது 17 மட்டுமே!

மேலும், அதே இடத்தில் வைத்து, ஆண்ட்ரூ, 20 வயதான Johanna Sjoberg என்னும் இளம்பெண்ணின் உடலை தவறாகத் தொட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் எப்ஸ்டீனுக்கும் உள்ள தொடர்பு தற்போது அமெரிக்க நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை துவக்கவேண்டும் என Republic என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொலிசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் புதிய தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ள பொலிசார், இளவரசர் ஆண்ட்ரூ மீது விசாரணை துவக்க மறுத்துவிட்டனர்.

பொலிசாரின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள Republic அமைப்பினர், ஆண்ட்ரூ மீது விசாரணை துவக்க போதுமான காரணங்கள் இருந்தும் பொலிசார் விசாரணை துவக்க மறுத்துள்ளார்கள். இதுவே ஆண்ட்ரூவாக இல்லாமல் வேறு யாராவது இதே நிலையில் இருந்திருந்தால், லண்டன் பொலிசார் இப்போது நிச்சயம் விசாரணை துவக்கியிருப்பார்கள் என்று கூறி தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...