<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>West Bengal &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/west-bengal/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 08 Dec 2024 02:43:52 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>West Bengal &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஃபெங்கல் புயலின் தாக்கம்: தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/fengal-cyclone-tamil-nadu-affect/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Nov 2024 11:22:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Fengal Cyclone Tamil Nadu Affect]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=179131</guid>

					<description><![CDATA[ஃபெங்கல் புயலின் தாக்கம்: தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ‘ஃபெங்கல் ’(Fenjal strome) புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் &#8211; தமிழ்நாடு உள்ளிட்ட பல பிரதேசங்கள் கனமழையினால் பாதிப்புக்குள்ளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ தொடக்கம், 80 முதல் 90 கி.மீ [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஃபெங்கல் புயலின் தாக்கம்: தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை</h4>
<p>வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ‘ஃபெங்கல் ’(Fenjal strome) புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் &#8211; தமிழ்நாடு உள்ளிட்ட பல பிரதேசங்கள் கனமழையினால் பாதிப்புக்குள்ளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய <a href="https://tamilnaadi.com/news/local/2024/12/07/sri-lanka-weather-forecast-in-sri-lanka-tamil/">வானிலை</a> ஆய்வு மையம், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ தொடக்கம், 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.</p>
<p>இந்த புயலானது புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதன் காரணமாக, தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், எனவே, இப்பகுதிகளுக்கு கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>தற்போது, சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 180 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம், கூறியுள்ளது.</p>
<p>மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/air-quality-warning-issued/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Nov 2024 14:14:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Air Quality Warning Issued]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=179074</guid>

					<description><![CDATA[காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! நாட்டை அண்மித்த கடற்பரப்புகளில் நிலைகொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வானது நகர்ந்து செல்வதால் காற்றின் தரக் குறியீடு சற்று எதிர்மறையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் இன்று(29.11.2024) முதல் பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதுடன், பல பகுதிகளில் இன்னும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, காலி, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 15 நகரங்களின் காற்றின் தரச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!</h4>
<p>நாட்டை அண்மித்த கடற்பரப்புகளில் நிலைகொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வானது நகர்ந்து செல்வதால் காற்றின் தரக் குறியீடு சற்று எதிர்மறையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/11/25/pressure-the-colombo-port-west-terminal-project/">கொழும்பு</a> உட்பட நாட்டின் சில பகுதிகளில் இன்று(29.11.2024) முதல் பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதுடன், பல பகுதிகளில் இன்னும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இன்று காலை நிலவரப்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, காலி, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 15 நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 101-150க்கு இடையில் சற்று சாதகமற்றதாக முறையில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 0-50 சாதாரணம் எனவும், 101-150 என்ற மதிப்பு ஆரோக்கியமற்ற தன்மை கொண்டது எனவும் கூறப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/northern-province-weather-today/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Nov 2024 11:48:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Climate Change]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Northern Province of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Northern Province Weather Today]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=178927</guid>

					<description><![CDATA[வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 1823 குடும்பங்களை சேர்ந்த 6301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், 69 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (27.11) மாலை வரை இடம்பெற்ற பாதிப்புகளை அடிப்படையாக கொண்டே பாதிக்கப்பட்டோரின் தகவல்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய தொடர்ந்து பெய்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 1823 குடும்பங்களை சேர்ந்த 6301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், 69 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நேற்று (27.11) மாலை வரை இடம்பெற்ற பாதிப்புகளை அடிப்படையாக கொண்டே பாதிக்கப்பட்டோரின் தகவல்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ளது.</p>
<p>இதற்கமைய தொடர்ந்து பெய்து வரும் மழையினால், வெள்ள நீர் வழிந்தோடாமையால் பாதிப்புக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>குறிப்பாக 775 குடும்பங்களைச் சேர்ந்த 2709 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதுடன், 11 தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் 126 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இவர்களுக்கு சமைத்த உணவுகள் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அத்துடன் 11 குளங்களும் உடைப்பெடுத்துள்ளதுடன், ஏ9 வீதி உட்பட சில வீதிப் போக்குவரத்துக்களும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவில் பாரிய தொடருந்து விபத்து</title>
		<link>https://tamilnaadi.com/news/world/train-accident-in-west-bengal/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jun 2024 08:37:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Train Accident In West Bengal]]></category>
		<category><![CDATA[Train Crash]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=146612</guid>

					<description><![CDATA[இந்தியாவில் பாரிய தொடருந்து விபத்து இந்தியாவின் &#8211; மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டார்ஜிலிங் தொடரந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடுகதி தொடருந்துடன் எதிரே வந்த தபால் தொடருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்தில் 8 பேர் பலியாகியதோடு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தானது, இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இந்தியாவில் பாரிய தொடருந்து விபத்து</h4>
<p>இந்தியாவின் &#8211; மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>டார்ஜிலிங் தொடரந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடுகதி தொடருந்துடன் எதிரே வந்த தபால் <a href="https://tamilnaadi.com/news/local/2024/06/03/train-services-delay-in-sri-lanka/">தொடருந்து</a> ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் விபத்தில் 8 பேர் பலியாகியதோடு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>குறித்த விபத்தானது, இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொடருந்தின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>விபத்தின் இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.</p>
<p>தற்போது சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஓட்டு கேட்க சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/bjp-candidate-who-kissed-a-woman-explain/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Apr 2024 08:27:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[All India Trinamool Congress]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[BJP candidate who kissed a woman explain]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=132052</guid>

					<description><![CDATA[ஓட்டு கேட்க சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர் மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாஜக வேட்பாளர் முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஓட்டு கேட்க சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்</h4>
<p>மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாஜக வேட்பாளர் <a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2024/03/28/trisha-old-video-now-viral/">முத்தம்</a> கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.</p>
<p>இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் அங்கு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.</p>
<p>அங்கு, இந்தியா கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளது.</p>
<p>மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் &#8211; இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.</p>
<p>மேற்கு வங்கத்தின் மால்டா வடக்கு சிட்டிங் எம்.பியாக இருக்கும் ககென் முர்மு பா.ஜ.க சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், அந்த பகுதியில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.</p>
<p>இந்நிலையில், பிரச்சாரம் செய்ய சென்ற இடத்தில் அங்கிருந்த பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும், வீடியோக்களையும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பரப்பி பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.</p>
<p>இந்நிலையில் ககென் முர்மு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, &#8220;அந்த பெண் என்னுடைய உறவினர் என்றும், அவர் எனக்கு குழந்தை மாதிரி எனவும் கூறியுள்ளார். மேலும், குழந்தையை முத்தமிடுவது தவறில்லை, பெண்களை நான் தாயாக நினைக்கிறேன். அனைத்து பெண்களையும் பாஜக மதிக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காற்றில் பறக்கும் காபி! இந்தியாவின் முதல் டிரோன் காபி டெலிவரி</title>
		<link>https://tamilnaadi.com/news/world/coffee-delivered-by-drone-in-kolkata-hotel-affana/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Feb 2024 04:56:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[coffee with kadhal]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Viral Video]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=120850</guid>

					<description><![CDATA[டிரோன் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போது, இந்தியாவில் ஒரு ஓட்டல் டிரோன் மூலம் காபி வினியோகித்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில், டிரோன் தொழில்நுட்பம் புதிய அதிசயங்களை படைத்து வருகிறது. அஃபனா பார்க் ஹோட்டல்(Hotel Afana Park) என்ற பெயரில் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு ஓட்டல், டிரோன் மூலம் காபி வினியோகிக்கும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் ஹோட்டலின் ஆப் மூலம் தங்களுக்கு பிடித்த காபியை ஆர்டர் செய்யலாம். ஆர்டர் பெறப்பட்டவுடன், டிரோன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>டிரோன் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போது, இந்தியாவில் ஒரு ஓட்டல் டிரோன் மூலம் காபி வினியோகித்து புதிய சாதனை படைத்துள்ளது.</p>
<p>இந்தியாவில், டிரோன் தொழில்நுட்பம் புதிய அதிசயங்களை படைத்து வருகிறது.</p>
<p>அஃபனா பார்க் ஹோட்டல்(Hotel Afana Park) என்ற பெயரில் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு ஓட்டல், டிரோன் மூலம் காபி வினியோகிக்கும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.</p>
<p>வாடிக்கையாளர்கள் ஹோட்டலின் ஆப் மூலம் தங்களுக்கு பிடித்த காபியை ஆர்டர் செய்யலாம்.</p>
<p>ஆர்டர் பெறப்பட்டவுடன், டிரோன் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, வாடிக்கையாளர் குறிப்பிட்ட இடத்திற்கு காபியை கொண்டு செல்லும்.</p>
<p>டிரோன், GPS மற்றும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாக இலக்கை அடையும்.</p>
<p>டிரோன் மூலம் டெலிவரி செய்வதால், காபி விரைவாகவும், சூடாகவும் வாடிக்கையாளர்களை சென்றடையும்.</p>
<p>டிராஃபிக் நெரிசல் மற்றும் வாகன நெரிசல்களை தவிர்க்க முடியும்.</p>
<p>டெலிவரி செலவு குறைவாக இருக்கும்.</p>
<p>சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது.</p>
<p>டிரோன் மூலம் காபி டெலிவரி செய்யப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, பலரும் ஓட்டல் நிர்வாகத்தின் புதுமையான முயற்சியை பாராட்டி வருகின்றனர்.</p>
<p>சில வாடிக்கையாளர்கள் தெரிவித்த கருத்தில் “இது மிகவும் புதுமையான ஒரு முயற்சி. டிரோன் மூலம் காபி பெறுவது ஒரு அற்புதமான அனுபவம்.&#8221; என்று குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>டிரோன் டெலிவரி தொழில்நுட்பம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், இதற்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. டிரோன்கள் மூலம் உணவு, மருந்துகள், மற்றும் பிற பொருட்களை விரைவாகவும், திறமையாகவும் டெலிவரி செய்ய முடியும். இதன் மூலம், நகரின் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கல்லூரியில் புகைபிடிப்பது, மது அருந்துவது எங்கள் உரிமை &#8211; மாணவியின் அடாவடி பேச்சு!</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/drinking-smoking-inside-campus-is-right-of-student/</link>
					<comments>https://tamilnaadi.com/uncategorized/drinking-smoking-inside-campus-is-right-of-student/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Aug 2023 14:57:33 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[breakingnews]]></category>
		<category><![CDATA[currentaffairs]]></category>
		<category><![CDATA[dailynews]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[latestnews]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[newsupdate]]></category>
		<category><![CDATA[updates]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[WorldNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=89833</guid>

					<description><![CDATA[கல்லூரி மாணவி ஒருவரின் சர்ச்சை பேச்சு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அரசு ஜாதவிப்பூர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பல்கலைக் கழகத்தில் சில நாட்களுக்கு முன் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மிகவும் மோசமாக பேசும் வீடியோ ஒன்று சமூக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கல்லூரி மாணவி ஒருவரின் சர்ச்சை பேச்சு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.</p>
<p>மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அரசு ஜாதவிப்பூர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பல்கலைக் கழகத்தில் சில நாட்களுக்கு முன் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.</p>
<p>இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மிகவும் மோசமாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் கண்டங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.</p>
<p>அந்த மாணவி பேசியதாவது &#8216;பல்கலைக் கழகம் எங்களுக்கு 2 ஆவது வீட்டைப் போன்றது. அதன் அடிப்படையில் இந்த வளாகத்தில் எங்களுக்கு புகை பிடிக்கவும், மது குடிக்கவும் உரிமை உண்டு.</p>
<p>இதற்காக நாங்கள் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. இது எங்களுடைய உரிமை&#8217; என்று அந்த மாணவி பேசியுள்ளார். அந்த மாணவியின் பேச்சை நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/uncategorized/drinking-smoking-inside-campus-is-right-of-student/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பத்ம விருதுகளை ஏற்க மறுத்த மேற்குவங்க பிரபலங்கள்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/west-bengal-celebrities-refuse-to-accept-padma-awards/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/west-bengal-celebrities-refuse-to-accept-padma-awards/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jan 2022 14:42:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[73rd Republic Day]]></category>
		<category><![CDATA[Awards]]></category>
		<category><![CDATA[Buddhadeb Bhattacharya]]></category>
		<category><![CDATA[Central Government]]></category>
		<category><![CDATA[chief minister]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Padma Awards]]></category>
		<category><![CDATA[Padma Shri]]></category>
		<category><![CDATA[playback singer]]></category>
		<category><![CDATA[political background]]></category>
		<category><![CDATA[recipients]]></category>
		<category><![CDATA[Sandhya Mukherjee's]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[West Bengal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=36869</guid>

					<description><![CDATA[இந்திய நாட்டின் 73வது குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியின் பெயர் பத்மஸ்ரீ விருது பட்டியல் இடம்பெற்றிருந்தது. எனினும் எனக்கு பத்மஸ்ரீ விருது வேண்டாம் என சந்தியா முகர்ஜி நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் சௌமி சென்குப்தா கூறியதாவது, 90 வயதில் விருது வழங்குவது என்னை அவமதிப்பது போல இருப்பதாக சந்தியா முகர்ஜி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இந்திய நாட்டின் 73வது குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.<br /><br />இதில் மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியின் பெயர் பத்மஸ்ரீ விருது பட்டியல் இடம்பெற்றிருந்தது. எனினும் எனக்கு பத்மஸ்ரீ விருது வேண்டாம் என சந்தியா முகர்ஜி நிராகரித்துள்ளார்.<br /><br />இதுகுறித்து அவரது மகள் சௌமி சென்குப்தா கூறியதாவது, 90 வயதில் விருது வழங்குவது என்னை அவமதிப்பது போல இருப்பதாக சந்தியா முகர்ஜி உணர்கிறார் .</p>
<p>பத்ம விருதுகள் போன்றவை இளம் வயதில் உள்ள கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டியது.அதனால் இந்த விருதுகளை நிராகரிக்கிறார்.</p>
<p>இந்த விருதை நிராகரிப்பது எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லை. காலம் கடந்து சாதனை படைத்த கலைஞர்களை கௌரவிப்பது எதிர்க்கவே இந்த விருதை பெற எனது தாயார் மறுக்கின்றார் என்றார்.<br /><br />இதேவேளை  பத்ம விருதுகளை ஏற்க போவதில்லை என மேற்குவங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.<br /><br />#WorldNews<br /><br /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/west-bengal-celebrities-refuse-to-accept-padma-awards/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
