<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>weather &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/weather/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 04 Nov 2025 03:06:30 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>weather &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!</title>
		<link>https://tamilnaadi.com/news/chemmani-mass-grave-excavation-work-begin-in-2026/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Nov 2025 18:09:25 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[chemmani mass graves jaffna]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[flood]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203954</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதால், அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதால், அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா. ரணித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று (நவம்பர் 03) நேரில் சென்று பார்வையிட்டனர்.</p>
<p>புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதால், அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆராயப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/heavy-rain-weather-forecast-for-next-24-hrs/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Oct 2025 06:42:13 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Climate Change]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203714</guid>

					<description><![CDATA[இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும். இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p>
<p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும். இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.</p>
<p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து</title>
		<link>https://tamilnaadi.com/news/nagapattinam-sri-lanka-ferry-service-temporarily-suspended-due-to-bay-of-bengal-weather/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 12:19:12 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Nagapattinam]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203413</guid>

					<description><![CDATA[வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் &#8211; இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாகப்பட்டினம் &#8211; இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை அக்டோபர் 2023 இல் மீண்டும் தொடங்கப்பட்டது. இது காங்கேசன்துறை வரை பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இந்தப் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் எடுக்கும். இந்தச் சேவை வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சேவை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் &#8211; இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.</p>
<p>நாகப்பட்டினம் &#8211; இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை அக்டோபர் 2023 இல் மீண்டும் தொடங்கப்பட்டது. இது காங்கேசன்துறை வரை பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இந்தப் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் எடுக்கும்.</p>
<p>இந்தச் சேவை வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சேவை டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>சுபம் ஃபெர்ரி நிறுவனம், அக்டோபர் 26 முதல் 28 வரை திட்டமிடப்பட்டிருந்த பயணங்களை மோசமான வானிலை காரணமாக ரத்து செய்துள்ளது.</p>
<p>இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, படகு புதுச்சேரியில் பராமரிப்பு (ட்ரை டாக்) பணிகளுக்காக அனுப்பப்படும் என்று சுபம் ஃபெர்ரி நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.</p>
<p>பராமரிப்பின் போது, படகின் இருக்கை வசதியை 150 இல் இருந்து 186 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்தச் சேவை, இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று, கலாசார உறவுகளை வலுப்படுத்துவதிலும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ்ப்பாணம் &#8211; அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி: கடற்பரப்புகளில் பலத்த காற்று வீச எச்சரிக்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/jaffna-achchuveli-records-highest-rainfall-amid-wet-weather-strong-winds-forecast-for-coastal-seas/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Oct 2025 14:12:39 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[achchuveli]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203058</guid>

					<description><![CDATA[நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் &#8211; அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அச்சுவேலியில் 112.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நயினாதீவில் 112.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது அதிகரித்து வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 முதல் 60 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் &#8211; அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>அச்சுவேலியில் 112.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நயினாதீவில் 112.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது அதிகரித்து வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p>
<p>காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.</p>
<p>திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாகக் காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்று இரவு இலங்கை வான்பரப்பில் காண வாய்ப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/changes-ins-sri-lanka-s-skies-today/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Oct 2025 08:27:13 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[technology]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202739</guid>

					<description><![CDATA[இலங்கையின் வான் பரப்பிலும் இன்று (அக்டோபர் 20) இரவு விண்கல் மழை பொழிவைப் பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர இது குறித்துத் தெரிவிக்கையில், இது இந்த ஆண்டுக்கான மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 11 மணிக்குப் பிறகு வானத்தை உற்று நோக்கும்போது ஓரியோனிட்ஸ் (Orionids) எனப்படும் விண்கல் மழையைக் காண முடியும். விஞ்ஞானியின் கூற்றுப்படி, அதிகாலை மூன்று மணி முதல் ஐந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் வான் பரப்பிலும் இன்று (அக்டோபர் 20) இரவு விண்கல் மழை பொழிவைப் பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p>
<p>விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர இது குறித்துத் தெரிவிக்கையில், இது இந்த ஆண்டுக்கான மிக முக்கியமான விண்கல் மழை பொழிவுகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இன்று இரவு 11 மணிக்குப் பிறகு வானத்தை உற்று நோக்கும்போது ஓரியோனிட்ஸ் (Orionids) எனப்படும் விண்கல் மழையைக் காண முடியும்.</p>
<p>விஞ்ஞானியின் கூற்றுப்படி, அதிகாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை ஓரியோனிட்ஸ் விண்கல் மழையை மிகத் தெளிவாகக் காண முடியும்.</p>
<p>இந்த விண்கல் மழை ஓரியன் விண்மீன் கூட்டத்தைச் சுற்றிப் பயணிக்கிறது. மேலும், இந்த விண்கல் மழை ஹேலி (Halley) எனப்படும் வால் நட்சத்திரத்திலிருந்து (Comet) ஏற்படுகிறது என்றும் விஞ்ஞானி கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/opening-floodgates-several-major-reservoirs/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Oct 2025 08:16:19 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[rain]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202808</guid>

					<description><![CDATA[பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் தலா 02 அடி மற்றும் மேலும் 02 வான்கதவுகள் தலா 04 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்டுள்ள 04 வான்கதவுகளில் இருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 8100 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் தலா 06 அடி வீதம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.</p>
<p>தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் தலா 02 அடி மற்றும் மேலும் 02 வான்கதவுகள் தலா 04 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.</p>
<p>திறக்கப்பட்டுள்ள 04 வான்கதவுகளில் இருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 8100 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் தலா 06 அடி வீதம் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.</p>
<p>திறக்கப்பட்டுள்ள இந்த வான்கதவுகளில் இருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 7206 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றன. இதற்கிடையில், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 தானியங்கி வான்கதவுகளும் தலா 05 அடி திறக்கப்பட்டுள்ளன.</p>
<p>திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 2940 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.</p>
<p>திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கலா ஓயா மற்றும் தெதுரு ஓயாவிற்குள் பாயும் என்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக செயல்படுமாறு புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Oct 2025 07:05:51 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[Thunder Showers]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202546</guid>

					<description><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் இன்று (அக்டோபர் 18) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக, சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் பாதிப்புக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் இன்று (அக்டோபர் 18) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p>
<p>குறிப்பாக, சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் பாதிப்புக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/landslide-warning-extended-in-several-parts-of-the-country-nbro-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Oct 2025 02:44:54 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Landslide warning]]></category>
		<category><![CDATA[NBRO Announcement]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202523</guid>

					<description><![CDATA[தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீடித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (அக்டோபர் 17) மாலை 4:00 மணி முதல் நாளை (அக்டோபர் 18) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல காலி மாவட்டம்: நெலுவ கம்பஹா மாவட்டம்: [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீடித்துள்ளது.</p>
<p>இந்த எச்சரிக்கை இன்று (அக்டோபர் 17) மாலை 4:00 மணி முதல் நாளை (அக்டோபர் 18) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:</p>
<p>பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல<br />
காலி மாவட்டம்: நெலுவ<br />
கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல<br />
கண்டி மாவட்டம்: தொலுவ, உடுநுவர, தெல்தோட்டை<br />
கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, மாவனெல்லை, ரம்புக்கனை, யட்டியந்தோட்டை, அரநாயக்க, ருவான்வெல்ல<br />
குருநாகல் மாவட்டம்: அலவ்வ, ரிதீயகம<br />
மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்க கோரளை, பல்லேபொல, ரத்தொட, உக்குவெல, யடவத்த<br />
மொனராகலை மாவட்டம்: மெதகம<br />
நுவரெலியா மாவட்டம்: ஹங்குரங்கேத்த, அம்பகமுவ<br />
இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, கலவான, எஹலியகொடை</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெரும்பாலான பகுதிகளில் மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/rain-expected-in-most-areas-after/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Oct 2025 11:13:52 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[rain expected]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202449</guid>

					<description><![CDATA[இன்றையதினம் (அக்டோபர் 17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இன்றையதினம் (அக்டோபர் 17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p>
<p>நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.</p>
<p>மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>
<p>நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து மணிக்கு 20-30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.</p>
<p>மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 கி.மீ. வரை அதிகரிக்கலாம். இதனால், இந்தப் பகுதிக் கடல்கள் அவ்வப்போது நடுத்தரமான அலைகளைக் கொண்டிருக்கும்.</p>
<p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, அப்பகுதிகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தெற்காசியாவில் மூன்றாவது இடத்தில் இலங்கை: எதில் தெரியுமா&#8230;!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-ranks-third-in-south-asia/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 07:12:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Ranks Third In South Asia]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201912</guid>

					<description><![CDATA[காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வதில், தெற்காசியாவில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பிராந்திய அறிக்கை தெரிவித்துள்ளது. 2016 முதல் 2022 வரையான ஏழு ஆண்டுகளில், இலங்கையில் சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் சிறுவர்கள் (மொத்த சிறுவர் சனத்தொகையில் 4.6%) இடம்பெயர்ந்துள்ளனர். இந்திய மற்றும் பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது. புயல்கள் (54%) மற்றும் வெள்ளப்பெருக்கு (44%) ஆகியவை இலங்கையில் சிறுவர்கள் இடம்பெயர முக்கிய காரணங்களாக உள்ளன. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வதில், தெற்காசியாவில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பிராந்திய அறிக்கை தெரிவித்துள்ளது.</p>
<p>2016 முதல் 2022 வரையான ஏழு ஆண்டுகளில், இலங்கையில் சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் சிறுவர்கள் (மொத்த சிறுவர் சனத்தொகையில் 4.6%) இடம்பெயர்ந்துள்ளனர்.</p>
<p>இந்திய மற்றும் பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது. புயல்கள் (54%) மற்றும் வெள்ளப்பெருக்கு (44%) ஆகியவை இலங்கையில் சிறுவர்கள் இடம்பெயர முக்கிய காரணங்களாக உள்ளன.</p>
<p>2016ஆம் ஆண்டு ஏற்பட்ட &#8216;ரோனு&#8217; சூறாவளியால் மட்டும் 141,000 சிறுவர்கள் இடம்பெயர்ந்தனர். முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற நடைமுறைகள் காரணமாகவே உயிர் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>இடம்பெயர்வு அபாயத்தை எதிர்கொள்ளும் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசாங்கங்கள் மற்றும் பங்காளிகள் இணைந்து செயல்பட வேண்டும் என யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
