<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>village &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/village/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 02:24:27 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>village &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மகேசன் இருக்கும் வரை யாழிற்கு விடிவில்லை &#8211; நடனேந்திரன் ஆதங்கம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/jaffna-will-not-dawn-until-mahesan-is-there-nadanendran-is-furious/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/jaffna-will-not-dawn-until-mahesan-is-there-nadanendran-is-furious/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Feb 2022 17:17:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[chairman]]></category>
		<category><![CDATA[Condemnation]]></category>
		<category><![CDATA[development]]></category>
		<category><![CDATA[district]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[implemented]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[jaffna District]]></category>
		<category><![CDATA[Mahesan]]></category>
		<category><![CDATA[Nadanendran]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Pradeshiya]]></category>
		<category><![CDATA[President]]></category>
		<category><![CDATA[Programs]]></category>
		<category><![CDATA[Sabha]]></category>
		<category><![CDATA[solutions]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[village]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=39428</guid>

					<description><![CDATA[யாழ் மாவட்ட அரச அதிபராக மகேசன் இருக்கும் வரை யாழ் மாவட்டத்திற்கு அபிவிருத்திகளோ மக்களுக்கு தீர்வுகளோ கிடைக்க போவதில்லை என வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்துள்ளார். வலிமேற்கு பிரதேச சபையின் மாதந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது உறுப்பினர் ஒருவர் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட கிராம நிகழ்ச்சி திட்டங்களின் அங்குரார்ப்பண வைபவம் கடந்த 3ம் திகதி நடைபெற்றது. இதில் உள்ளுர் மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து யாழ் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ் மாவட்ட அரச அதிபராக மகேசன் இருக்கும் வரை யாழ் மாவட்டத்திற்கு அபிவிருத்திகளோ மக்களுக்கு தீர்வுகளோ கிடைக்க போவதில்லை என வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.</p>
<p>வலிமேற்கு பிரதேச சபையின் மாதந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.</p>
<p>இதன் போது உறுப்பினர் ஒருவர் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட கிராம நிகழ்ச்சி திட்டங்களின் அங்குரார்ப்பண வைபவம் கடந்த 3ம் திகதி நடைபெற்றது.</p>
<p>இதில் உள்ளுர் மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு ஊடாக ஒரு பட்டியல் அனுப்பப்பட்டு அப்பட்டியலுக்கு இணங்கவே நிகழ்வுகள் நடைபெற்றன .</p>
<p>இதற்கு யாழ் மாவட்டம் சார்பாக எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளையும் அழைக்கவில்லை. மாறாக கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடனேயே நிகழ்வுகள் நடைபெற்றது.</p>
<p>யாழ் மாவட்டத்தில் மட்டும் ஏன் எங்களை ஒதுக்குகின்றனர் என்ற கேள்வியையும் கவலையையும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வெளிப்படுத்தியிருந்தார்.</p>
<p>இதற்கு பதிலளித்த தவிசாளர் நடனேந்திரன்,</p>
<p>நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இவ்வாறான பல நடைமுறைகளை முன்னெடுத்துவருகின்றார்.</p>
<p>அத்துடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அந்த அரசாங்கம் சரியாகவே செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் யாழ் மாவட்டத்தில் மட்டும் தான் இவ்வாறான புறக்கணிப்புக்கள் நடைபெற்றுள்ளன.</p>
<p>இதற்கு மாவட்டத்தின் அரச அதிபரே பொறுப்புக் கூறவேண்டும். ஆனால் அவர் ஒரு அரசியல் தரப்பின் பின்னணியில் இருந்து செயற்படுவதால் அந்த அரசியல் தரப்பினரது முடிவுகளையே மக்களிடம் அரசாங்க அதிகாரிகளூடாக திணிக்கப்படுகின்றது.</p>
<p>இதனால் உண்மையாக தீர்க்கப்பட வேண்டிய மக்களின் தேவைப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு ஒரு சிலரின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவை நடைமுறைப்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.</p>
<p>அதனால்தான் குறித்த நிகழ்வுக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் அழைக்கப்படாது புறக்கணிக்கப்பட்டனரே தவிர மாற்றுக்காரணம் இருப்பதாக தெரியவில்லை .</p>
<p>தற்போதைய மாவட்ட அரச அதிபர் பதவியில் இருக்கும்வரை எமது பிரதேசத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த யாழ் மாவட்ட மக்களுக்கும் நியாயமான அவிருத்திகளோ அன்றி தீர்வுகளோ கிடைக்கப்போவதில்லை</p>
<p>மாவட்ட அரச அதிபர் அரசியல் வாதியின் ஒருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு எடுபடாது தான் ஓர் அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க உயரதிகாரி என்ற நிலைப்பாட்டுடன் மக்களுக்கான சேவையை மேற்கொள்ள வேண்டும்.</p>
<p>அவ்வாறு செயற்பட முடியாவிடின் முன்னைய அரச அதிபரைப் போன்று பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>நாங்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதுவோம் எனவும் இதனை ஒரு கண்டன தீர்மானமாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/jaffna-will-not-dawn-until-mahesan-is-there-nadanendran-is-furious/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கிளிநொச்சி காட்டு யானைகள் செய்த விசித்திர செயல்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/strange-act-done-by-wild-elephants-in-kilinochchi/</link>
					<comments>https://tamilnaadi.com/news/strange-act-done-by-wild-elephants-in-kilinochchi/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Feb 2022 15:38:47 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[akkarayan]]></category>
		<category><![CDATA[bearing]]></category>
		<category><![CDATA[Coconut]]></category>
		<category><![CDATA[Destroyed]]></category>
		<category><![CDATA[Divisional Secretariat]]></category>
		<category><![CDATA[elephants]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[fruit]]></category>
		<category><![CDATA[Grama Niladhari]]></category>
		<category><![CDATA[Kannagaipuram]]></category>
		<category><![CDATA[Karachi]]></category>
		<category><![CDATA[Kilinochchi]]></category>
		<category><![CDATA[livelihood]]></category>
		<category><![CDATA[Local farmers]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Skandapuram]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[village]]></category>
		<category><![CDATA[Wild]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=39171</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி கண்ணகைபுரம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெருமளவான பயன்தரு தென்னை மரங்களை அழித்துள்ளன. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகை புரம் கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழ்வாதார பயிர்களான தென்னை மற்றும் ஏனைய பயன்தரு மரங்களை அழித்துள்ளன. இவ்வாறு காட்டு யானைகளின் தாக்கத்துக்கு உள்ளாகியமை தொடர்பில் கிராம அலுவலரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் கிராம அலுவலர் சம்பவம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். குறிப்பாக அக்கராயன் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பகுதிகளுக்கான யானை வேலிகளை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கிளிநொச்சி கண்ணகைபுரம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெருமளவான பயன்தரு தென்னை மரங்களை அழித்துள்ளன.</p>
<p>கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகை புரம் கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழ்வாதார பயிர்களான தென்னை மற்றும் ஏனைய பயன்தரு மரங்களை அழித்துள்ளன.</p>
<p>இவ்வாறு காட்டு யானைகளின் தாக்கத்துக்கு உள்ளாகியமை தொடர்பில் கிராம அலுவலரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் கிராம அலுவலர் சம்பவம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.</p>
<p>குறிப்பாக அக்கராயன் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பகுதிகளுக்கான யானை வேலிகளை அமைக்கின்ற போது இந்தப் பிரதேசங்களில் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் பிரதேச விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/strange-act-done-by-wild-elephants-in-kilinochchi/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ராயன் இறந்ததற்கு இதுவா காரணம் &#8211; சோகத்தில் அரச குடும்பம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/this-is-the-reason-why-ryan-died-the-royal-family-in-grief/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/this-is-the-reason-why-ryan-died-the-royal-family-in-grief/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Feb 2022 10:56:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[excavated]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Igara]]></category>
		<category><![CDATA[machinery]]></category>
		<category><![CDATA[Moroccan royal family]]></category>
		<category><![CDATA[northern Morocco]]></category>
		<category><![CDATA[oxygen]]></category>
		<category><![CDATA[Ryan Avram]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[village]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=38376</guid>

					<description><![CDATA[மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் விழுந்து சிக்கிக் கொண்டான். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. விழுந்தவுடன் என்னை தூக்குங்கள் என சிறுவன் அழுததாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் விழுந்து சிக்கிக் கொண்டான்.</p>
<p>உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.</p>
<p>சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. விழுந்தவுடன் என்னை தூக்குங்கள் என சிறுவன் அழுததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>செல்போன் கேமிரா மூலம் அவன் இருந்த பகுதியை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது. அந்த சிறுவன் மீட்பு நடவடிக்கை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. .</p>
<p>எனினும் பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் பணிகள் பாதிக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவனின் உடல் மீட்பு</p>
<p>மீட்பு பணி நடைபெறும் பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சிறுவன் மீட்கப்பட்டான் என்ற செய்திக்காக காத்திருந்தனர்.</p>
<p>இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரற்ற சிறுவன் உடல் மீட்கப்பட்டதாகவும் மொராக்கோ அரச குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
#WorldNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/this-is-the-reason-why-ryan-died-the-royal-family-in-grief/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மர்ம நபர்கள் தாக்கியதில் 34 பேர் பலி : நைஜீரியாவில் சம்பவம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/34-killed-in-mysterious-attack/</link>
					<comments>https://tamilnaadi.com/news/34-killed-in-mysterious-attack/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Sep 2021 06:22:21 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Mystery Persons]]></category>
		<category><![CDATA[Nigeria]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[village]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=12940</guid>

					<description><![CDATA[நைஜீரியாவின் வடமேற்கே மர்ம நபர்கள் நடாத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கவுரா நகரில் மடமய் கிராமத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 7 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த தாக்குதலின்போது, சில வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
										<content:encoded><![CDATA[<p>நைஜீரியாவின் வடமேற்கே மர்ம நபர்கள் நடாத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p>
<p>கவுரா நகரில் மடமய் கிராமத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>இத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 7 பேர் காயமடைந்து உள்ளனர்.</p>
<p>இந்த தாக்குதலின்போது, சில வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p>
<p>நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/34-killed-in-mysterious-attack/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சீனி நெருக்கடிக்கு தீர்வாக கரும்பு உற்பத்தி!!</title>
		<link>https://tamilnaadi.com/news/sugarcane-production-as-a-solution-to-the-sugar-crisis/</link>
					<comments>https://tamilnaadi.com/news/sugarcane-production-as-a-solution-to-the-sugar-crisis/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Sep 2021 15:51:59 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[sugar]]></category>
		<category><![CDATA[Sugarcane production]]></category>
		<category><![CDATA[village]]></category>
		<category><![CDATA[Yanaka vakkumpura]]></category>
		<category><![CDATA[இயந்திரம்]]></category>
		<category><![CDATA[உபகரணம்]]></category>
		<category><![CDATA[கரும்பு உற்பத்தி]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<category><![CDATA[சீனி]]></category>
		<category><![CDATA[ஜானக வக்கும்புர]]></category>
		<category><![CDATA[பதுளை]]></category>
		<category><![CDATA[புத்தளம்]]></category>
		<category><![CDATA[மாத்தறை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=5879</guid>

					<description><![CDATA[சீனி நெருக்கடிக்கு தீர்வாக கரும்பு உற்பத்தி!! சீனி நெருக்கடிக்கு தீர்வாக இவ்வாண்டு கரும்பு உற்பத்திக் கிராமங்கள் பல அமைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். மேலும், கரும்பு உற்பத்தி செய்யும் கிராமங்களை அமைக்கவும் கரும்புப் பானி உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் கரும்பு பயிரிடக்கூடிய பகுதிகளை ஆராயுமாறு கரும்பு ஆராய்ச்சி நிறுவனத் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, புத்தளம், கிளிநொச்சி மற்றும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சீனி நெருக்கடிக்கு தீர்வாக கரும்பு உற்பத்தி!!</h4>
<p>சீனி நெருக்கடிக்கு தீர்வாக இவ்வாண்டு கரும்பு உற்பத்திக் கிராமங்கள் பல அமைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், கரும்பு உற்பத்தி செய்யும் கிராமங்களை அமைக்கவும் கரும்புப் பானி உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p>
<p>நாட்டில் கரும்பு பயிரிடக்கூடிய பகுதிகளை ஆராயுமாறு கரும்பு ஆராய்ச்சி நிறுவனத் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>காலி, மாத்தறை, புத்தளம், கிளிநொச்சி மற்றும் பதுளை மாவட்டங்களில் கரும்பு உற்பத்தி விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/sugarcane-production-as-a-solution-to-the-sugar-crisis/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
