<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Velan Swamigal &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/velan-swamigal/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 28 Jan 2026 05:12:30 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Velan Swamigal &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பெப்ரவரி 4 கரி நாள்: பொது அமைப்புகளின் ஆதரவைத் திரட்டும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%aa%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-4-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jan 2026 05:12:30 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[February 4 Black Day]]></category>
		<category><![CDATA[Jaffna University Student Union]]></category>
		<category><![CDATA[Missing Persons Relatives Protest]]></category>
		<category><![CDATA[North East Sri Lanka Protest 2026.]]></category>
		<category><![CDATA[Velan Swamigal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=211322</guid>

					<description><![CDATA[இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை &#8216;கரி நாள்&#8217; ஆகப் பிரகடனப்படுத்தி, வடக்கு &#8211; கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பொது அமைப்புகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, காணி அபகரிப்பு மற்றும் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்த எதிர்ப்புப் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் போராட்டமாக மாற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தின் முக்கிய சிவில் அமைப்புகள் மற்றும் ஆளுமைகளுடன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை &#8216;கரி நாள்&#8217; ஆகப் பிரகடனப்படுத்தி, வடக்கு &#8211; கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பொது அமைப்புகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.</p>
<p>தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, காணி அபகரிப்பு மற்றும் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்த எதிர்ப்புப் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் போராட்டமாக மாற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தின் முக்கிய சிவில் அமைப்புகள் மற்றும் ஆளுமைகளுடன் மாணவர்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.</p>
<p>மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான (P2P) மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் யாழ். மாவட்ட தலைவி திருமதி இளங்கோதை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர். மு. கோமகன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்: . உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துத் தமது போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கமளித்தனர்.</p>
<p>சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள சூழலில், வடக்கு &#8211; கிழக்குத் தழுவிய ரீதியில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும், என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.</p>
<p>இந்தச் சந்திப்புகளின் மூலம் போராட்டத்திற்கான ஒருமித்த ஆதரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்ட வழக்கு: பெப்ரவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/thaiyitti-tissa-vihara-protest-case-adjourned-mallakam-court-postpones-hearing-to-february-26/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 15:35:24 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Jaffna Court News 2026.]]></category>
		<category><![CDATA[M.A. Sumanthiran]]></category>
		<category><![CDATA[Mallakam Magistrate Court]]></category>
		<category><![CDATA[Thaiyitti Vihara Protest]]></category>
		<category><![CDATA[Velan Swamigal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=209022</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார். தையிட்டியில் உள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றினால் சொந்தப் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.</p>
<p>தையிட்டியில் உள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றினால் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.</p>
<p>வேலன் சுவாமிகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் சார்பாகப் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா சிரேஷ்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்</p>
<p>தையிட்டி விகாரை விவகாரம் வடக்கு அரசியலில் நீண்டகாலமாக ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வரும் நிலையில், இந்த வழக்கு விசாரணை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மொழியுரிமையை மறுத்த சிறிலங்கா காவல்துறை : வேலன் சுவாமிகள் கடும் கண்டனம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Feb 2025 07:30:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<category><![CDATA[Velan Swamigal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=192284</guid>

					<description><![CDATA[மொழியுரிமையை மறுத்த சிறிலங்கா காவல்துறை : வேலன் சுவாமிகள் கடும் கண்டனம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நீதிக்கான பேரணி தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், குறித்த வழக்கு நாளை நாளை (14) கிளிநொச்சி (kilinochchi) நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. இந்த வழக்கிற்கு முன்னிலையாகுமாறு சிறிலங்கா காவல்துறையினர் சிங்கள மொழியில் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர், வேலன் சுவாமிகள் (velan [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மொழியுரிமையை மறுத்த சிறிலங்கா காவல்துறை : வேலன் சுவாமிகள் கடும் கண்டனம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/12/20/condemnation-of-injustice-against-teachers/">பொத்துவில்</a> முதல் பொலிகண்டி வரை நீதிக்கான பேரணி தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது.</p>
<p>இதனடிப்படையில், குறித்த வழக்கு நாளை நாளை (14) கிளிநொச்சி (kilinochchi) நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.</p>
<p>இந்த வழக்கிற்கு முன்னிலையாகுமாறு சிறிலங்கா காவல்துறையினர் சிங்கள மொழியில் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த விடயத்தை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர், வேலன் சுவாமிகள் (velan swamigal) தெரிவித்துள்ளார்.</p>
<p>இவ்வாறு சிங்கள மொழியில் வழங்கப்பட்ட அறிவித்தல் மூலம் மொழியுரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெடுக்குநாறி மலைக்கு நள்ளிரவில் வழிபாட்டிற்குச் சென்ற வேலன் சுவாமிகள் கோரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/continued-tension-in-vedukunari-velan-swamigal/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/continued-tension-in-vedukunari-velan-swamigal/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Mar 2024 04:08:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Continued Tension In Vedukunari Velan Swamigal]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Shivaratri]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[vavuniya]]></category>
		<category><![CDATA[Velan Swamigal]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=124335</guid>

					<description><![CDATA[வெடுக்குநாறி மலைக்கு நள்ளிரவில் வழிபாட்டிற்குச் சென்ற வேலன் சுவாமிகள் கோரிக்கை வெடுக்குநாறி ஆலய விவகாரமானது வலுப்பெற்று வரும் நிலையில், பாரிய போராட்டம் ஒன்றை நாளைய தினம் வடக்கு &#8211; கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வெடுக்குநாறி மலையில் இன்றைய தினம்(08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது ஏற்பட்ட பதற்ற [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வெடுக்குநாறி மலைக்கு நள்ளிரவில் வழிபாட்டிற்குச் சென்ற வேலன் சுவாமிகள் கோரிக்கை</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/03/09/continued-tension-in-vedukunari-velan-swamigal/">வெடுக்குநாறி</a> ஆலய விவகாரமானது வலுப்பெற்று வரும் நிலையில், பாரிய போராட்டம் ஒன்றை நாளைய தினம் வடக்கு &#8211; கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன் குறித்த போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>வெடுக்குநாறி மலையில் இன்றைய தினம்(08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்தே இவர் இதனை கூறியுள்ளார்.</p>
<p>வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும் , பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.</p>
<p>இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p>
<p>இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.</p>
<p>இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/continued-tension-in-vedukunari-velan-swamigal/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
