<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Vandalism &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/vandalism/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 09 Dec 2025 11:02:07 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Vandalism &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சேதமடைந்த தொலைத்தொடர்பு வயர்களைச் சேதப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் &#8211; பொலிஸார் எச்சரிக்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/police-warns-vandalizing-exposed-telecommunication-wires-is-a-punishable-offence-amidst-restoration-efforts/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 13:51:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Police Warning]]></category>
		<category><![CDATA[Post-Disaster Restoration]]></category>
		<category><![CDATA[Public Cooperation.]]></category>
		<category><![CDATA[Punishable Offence]]></category>
		<category><![CDATA[Telecommunication Wires]]></category>
		<category><![CDATA[Vandalism]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206645</guid>

					<description><![CDATA[சமீபத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகச் சில பகுதிகளில் வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு வயர்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் அவற்றை வெட்டி அகற்றுவது தொடர்பான தகவல்கள் பதிவாகி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சேதமடைந்த தொலைத்தொடர்பு வயர்களைச் சேதப்படுத்துவது, வெட்டி அகற்றுவது தொடர்பான தகவல்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலைமையானது, தொலைத்தொடர்பு வசதிகளை விரைவாக வழமைக்குத் திருப்புவதற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் காரணமாகப் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சமீபத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகச் சில பகுதிகளில் வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு வயர்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் அவற்றை வெட்டி அகற்றுவது தொடர்பான தகவல்கள் பதிவாகி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>சேதமடைந்த தொலைத்தொடர்பு வயர்களைச் சேதப்படுத்துவது, வெட்டி அகற்றுவது தொடர்பான தகவல்கள் பதிவாகி வருகின்றன.</p>
<p>இந்த நிலைமையானது, தொலைத்தொடர்பு வசதிகளை விரைவாக வழமைக்குத் திருப்புவதற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>
<p>இதன் காரணமாகப் பொலிஸார் பொதுமக்கள் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளனர், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு வயர்களுக்குச் சேதம் விளைவித்தல், அவற்றை வெட்டி அகற்றுதல், தம்வசம் வைத்திருத்தல் அல்லது அதன் கட்டமைப்புகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>
<p>இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>அனர்த்தங்களுக்கு உள்ளான வீதியொன்றைப் புனரமைக்கும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான நிலத்தடித் தொலைத்தொடர்பு வயர்கள் தென்பட்டால், அது குறித்து உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணி நினைவுத்தூபி மீண்டும் சேதம்: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் முறைப்பாடு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/semmani-memorial-pillar-vandalized-again-npp-member-files-police-complaint-demanding-arrest-of-perpetrators/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 13:46:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Anamika Vilakku Protest]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Human Rights Memorial.]]></category>
		<category><![CDATA[jaffna police]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[S. Pratheepan]]></category>
		<category><![CDATA[Semmani Memorial]]></category>
		<category><![CDATA[Vandalism]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206636</guid>

					<description><![CDATA[செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி மீண்டும் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு கோரி யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் செய்துள்ளார். செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நினைவாகச் செம்மணியில் புதிதாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி மீண்டும் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு கோரி யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் செய்துள்ளார்.</p>
<p>செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நினைவாகச் செம்மணியில் புதிதாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தது.</p>
<p>கடந்த ஒக்டோபர் மாதம் இனந்தெரியாதோரால் இந்த நினைவுத்தூபி முதன்முதலில் இடித்தழிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், உடனடியாக புதிய நினைவுத்தூபி மீளவும் நிர்மாணிக்கப்பட்டது.</p>
<p>தற்போது, மீண்டும் இனந்தெரியாதோரால் இத் தூபி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) அன்று இடித்தழிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தத் தூபியைச் சேதமாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என அரச கட்சியினரே (NPP) யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
