<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>tsunami &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/tsunami/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 25 Oct 2025 09:56:25 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>tsunami &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நவம்பர் 5 அன்று நாடு தழுவிய சுனாமி தயார்நிலைப் பயிற்சி: அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவிப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/small-earthquakes-near-the-island-of-sumatra/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Oct 2025 09:56:25 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Earthquake]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Kalutara]]></category>
		<category><![CDATA[Matara]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203289</guid>

					<description><![CDATA[நாடு முழுவதினையும் உள்ளடக்கி நவம்பர் 5 ஆம் திகதி சுனாமி தயார்நிலைப் பயிற்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) தெரிவித்துள்ளார். முப்படையினர், பொலிஸார் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் சுனாமி தயார்நிலைப் பயிற்சி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது இவ்வாறு கூறியுள்ளார். கடந்த ஒரு மாதமாக சுமத்ரா தீவுக்கு அருகில் பல சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடு முழுவதினையும் உள்ளடக்கி நவம்பர் 5 ஆம் திகதி சுனாமி தயார்நிலைப் பயிற்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) தெரிவித்துள்ளார்.</p>
<p>முப்படையினர், பொலிஸார் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் சுனாமி தயார்நிலைப் பயிற்சி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>கடந்த ஒரு மாதமாக சுமத்ரா தீவுக்கு அருகில் பல சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சுனாமி தயார்நிலைப் பயிற்சி, இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிராந்திய அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>சுனாமிக்கான தயாரிப்புகளின் முக்கிய பகுதியாக களுத்துறை, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய 4 மாவட்டங்களில் இந்த பயிற்சி நடத்தப்படும் என்றும், மற்ற மாவட்டங்களையும் உள்ளடக்கும் என்றும் மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>சுமத்ரா தீவில் 6.5 ரிக்டர் அளவுகோலுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால், நாட்டில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், அதற்கு முன் தயாரிப்பு அவசியம் என்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர் ஜெனரல் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பப்புவா நியூ கினியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/powerful-earthquake-hits-papua-new-guinea/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 16:35:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Earthquake]]></category>
		<category><![CDATA[Papua New Guinea]]></category>
		<category><![CDATA[Powerful Earthquake Hits Papua New Guinea]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201980</guid>

					<description><![CDATA[பப்புவா நியூ கினியாவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், சாலமன் கடலில் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் மையம் கிம்பே (Kimbe) நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 194 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் இருந்தபோதிலும், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பப்புவா நியூ கினியாவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த நிலநடுக்கம், சாலமன் கடலில் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் மையம் கிம்பே (Kimbe) நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 194 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.</p>
<p>நிலநடுக்கத்தின் தீவிரம் இருந்தபோதிலும், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் அல்லது பெரும் சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் பதிவாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p>
<p>அதன் வலிமை இருந்தபோதிலும், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எந்த சுனாமி எச்சரிக்கையையும் வெளியிடவில்லை.</p>
<p>ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) முன்னர் அறிவித்தபடி, செவ்வாயன்று பப்புவா நியூ கினியாவை 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/earthquake-southern-philippines-coast/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Jun 2025 11:41:26 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Earthquake]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Philippines]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200812</guid>

					<description><![CDATA[பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று(28) 6.1 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சுனாமி குறித்து எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, கடந்த 24 ஆம் திகதி தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த நிலநடுக்கமானது இன்று(28) 6.1 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.</p>
<p>டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>மேலும், சுனாமி குறித்து எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இதேவேளை, கடந்த 24 ஆம் திகதி தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மன்னாரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tsunami-commemoration-held-in-puthukkudiyiruppu/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Dec 2024 15:58:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=184086</guid>

					<description><![CDATA[மன்னாரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது. சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மன்னாரில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/12/26/tsunami-baby-tribute-to-people-died-in-the-tsunami/">சுனாமி</a> பேரலையில் உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>முன்னாள் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.</p>
<p>சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p>இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் பெனடிற், ரொலோ இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் வசந்த், <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D" target="_blank" rel="noopener">மன்னார்</a> நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ், கடற்றொழிலாளர்கள்,வர்த்தகர்கள், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இணைந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</p>
<p>இதேவேளை சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 20 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (26) மன்னார் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.</p>
<p>இதன் போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகளும் நடைபெற்றது.</p>
<p>குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</p>
<p>சுனாமியினால் உயிர்நீர்த்தவர்களுக்கு புத்தளத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றது.</p>
<p>2004.12.2ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் உயிரிழந்தவர்களை நினைவுகூறி இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.</p>
<p>புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், முப்படையினர் கலந்து கொண்டனர்.</p>
<p>இதன்போது சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மா சாந்தி வேண்டி புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்களினால் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.</p>
<p>சுனாமி ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.</p>
<p>வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (26) காலை 8.05 மணியளவில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு ஐயனார்கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p>இதன் பின்னர் பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றியதுடன் நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p>இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (S. Sivamohan), முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tsunami-baby-tribute-to-people-died-in-the-tsunami/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Dec 2024 15:36:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=184053</guid>

					<description><![CDATA[ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையின் போது உயிரிழந்த உறவுகளுக்கு சுனாமி பேபி 81 என்றழைக்கப்படும் ஜெயராஜா அபிலாஷ் அஞ்சலி செலுத்தினார். மட்டக்களப்பு (Batticaloa) குருக்கள் மடத்திலுள்ள அவரது வீட்டில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் தூபியில் இன்று (26) காலை 9.05 மணிக்கு குடும்பத்தினருடன் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது 2004.12.26 அன்று கல்முனை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுனாமி பேபி</h4>
<p>20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற <a href="https://tamilnaadi.com/news/local/2024/12/26/2024-tsunami-commemoration-in-vavuniya/">சுனாமி</a> ஆழிப்பேரலையின் போது உயிரிழந்த உறவுகளுக்கு சுனாமி பேபி 81 என்றழைக்கப்படும் ஜெயராஜா அபிலாஷ் அஞ்சலி செலுத்தினார்.</p>
<p>மட்டக்களப்பு (Batticaloa) குருக்கள் மடத்திலுள்ள அவரது வீட்டில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் தூபியில் இன்று (26) காலை 9.05 மணிக்கு குடும்பத்தினருடன் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.</p>
<p>கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது 2004.12.26 அன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோல கல்லோலப்பட்டது.</p>
<p>இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக &#8221;சுனாமி பேபி 81&#8221;எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக மாறினான் இந்த ஜெயராசா அபிலாஷ்.</p>
<p>இந்தக் குழந்தை என்னுடையது என்னுடையது எனது 09 தாய்மார்கள் போராடினர். பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது.</p>
<p>இக்குழந்தை எங்களுடையது என ஒன்பது தாய்மார் போராடிய நிலையில், ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.</p>
<p>பின்னர் 52 நாட்களின் பின்னர் ஜெயராசா யுனித்தலா தம்பதியினர்களின் புதல்வனே அபிலாஷ் என நிரூபணமாகிய பின்னர் அந்த குழந்தை குறித்த தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.</p>
<p>தற்போது மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் வசித்து வரும் அபிலாஷ் அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத் தூபி ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றார்.</p>
<p>இந்த நிலையில் 20 வயதுடைய அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது பெற்றோருடன் அஞ்சலியை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வவுனியாவில் உணர்வெழுச்சியடன் அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/2024-tsunami-commemoration-in-vavuniya/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Dec 2024 15:33:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<category><![CDATA[vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=184055</guid>

					<description><![CDATA[வவுனியாவில் உணர்வெழுச்சியடன் அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் இன்று (26) இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்தவர்களிற்கு காலை 9.25 &#8211; 9.27 வரை இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதத்தலைவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளுடன் உயிரிழந்தவர்களுக்கு தீபம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வவுனியாவில் உணர்வெழுச்சியடன் அனுஷ்டிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/12/26/2024-tsunami-commemoration-in-vavuniya/">சுனாமி</a> பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.</p>
<p>மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் இன்று (26) இந்த நிகழ்வு இடம்பெற்றது.</p>
<p>இதன்போது உயிரிழந்தவர்களிற்கு காலை 9.25 &#8211; 9.27 வரை இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதத்தலைவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளுடன் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p>அத்துடன் சுனாமி பேரவலம் தொடர்பாகவும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாகவும் அரச அதிபரின் கருத்துரையும் இடம்பெற்றது.</p>
<p>இந்த நிகழ்வில் திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 20ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.</p>
<p>வவுனியா &#8211; பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இன்று (26) குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.</p>
<p>இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p>நரசிங்கர் ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா, தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க (Upali Samarasinghe), நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம.ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன், முத்து முகமது (Muthu Mohammed)மற்றும் இந்து, பௌத்த மதகுருமார்கள், பொது அமைப்புகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.</p>
<p>குறித்த நினைவு தூபியானது சுனாமி பேரலை ஏற்பட்டு 31ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகும். இது தற்போது நகரசபையால் புணர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மலையகத்தில் சுனாமி அனர்த்தத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/20th-anniversary-of-the-tsunami-disaster-upcountry/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Dec 2024 15:33:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Upcountry People]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=184056</guid>

					<description><![CDATA[மலையகத்தில் சுனாமி அனர்த்தத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 20 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25 இற்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது. இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தியுள்ளனர். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மலையகத்தில் சுனாமி அனர்த்தத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/12/26/tsunami-baby-tribute-to-people-died-in-the-tsunami/">சுனாமி</a> ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 20 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.</p>
<p>கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25 இற்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.</p>
<p>இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தியுள்ளனர்.</p>
<p>ஹட்டன், காவல்துறையினர், நகர வர்த்தகர்கள் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் அட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் &#8211; சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Dec 2024 10:56:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[California]]></category>
		<category><![CDATA[Earthquake]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<category><![CDATA[United States of America]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=179955</guid>

					<description><![CDATA[அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் &#8211; சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள் அமெரிக்காவின் (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கி.மீ., தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் &#8211; சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/12/01/slpp-leadership-in-local-government-elaection/">அமெரிக்காவின்</a> (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலநடுக்கம் நேற்று (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கி.மீ., தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டொசினா பகுதியில் கடுமையாக உணரப்பட்டது. இதனால் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p>
<p>நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.</p>
<p>பெரிய அளவில் கடல் கொந்தளிப்பு இல்லாத நிலையில், சிறிது நேரத்துக்கு பின் சுனாமி முன்னெச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளது.<br />
அமெரிக்காவின் (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலநடுக்கம் நேற்று (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கி.மீ., தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டொசினா பகுதியில் கடுமையாக உணரப்பட்டது. இதனால் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p>
<p>நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.</p>
<p>பெரிய அளவில் கடல் கொந்தளிப்பு இல்லாத நிலையில், சிறிது நேரத்துக்கு பின் சுனாமி முன்னெச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுனாமியில் காணாமல் போன மகளை AI தொழில்நுட்பத்தின் மூலம் தேடும் குடும்பம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/girl-missed-in-tsunami-family-using-ai-to-find/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Oct 2024 11:32:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Girl Missed In Tsunami Family Using Ai To Find]]></category>
		<category><![CDATA[technology]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=169795</guid>

					<description><![CDATA[சுனாமியில் காணாமல் போன மகளை AI தொழில்நுட்பத்தின் மூலம் தேடும் குடும்பம் சுனாமியில் காணாமல் போன பெண்னை AI தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமி பேரிடரில், ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தின் இளைய மகள் காணாமல் போயிருந்தார். அவரைக் கண்டுபிடிக்கும் வகையில், AI தொழில்நுட்பத்தின் மூலம் அவரது தற்போதைய வடிவத்தை கொண்ட புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுனாமி இடம்பெற்ற தினத்தன்று ஒன்பது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சுனாமியில் காணாமல் போன மகளை AI தொழில்நுட்பத்தின் மூலம் தேடும் குடும்பம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/10/10/girl-missed-in-tsunami-family-using-ai-to-find/">சுனாமி</a>யில் காணாமல் போன பெண்னை AI தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர்.</p>
<p>20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமி பேரிடரில், ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தின் இளைய மகள் காணாமல் போயிருந்தார்.</p>
<p>அவரைக் கண்டுபிடிக்கும் வகையில், AI தொழில்நுட்பத்தின் மூலம் அவரது தற்போதைய வடிவத்தை கொண்ட புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.</p>
<p>சுனாமி இடம்பெற்ற தினத்தன்று ஒன்பது பேர் கொண்ட குடும்பத்துடன் 6 வயதான ஹிருணி தருஷிகா என்ற சிறுமி, ஹிக்கடுவவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.</p>
<p>அனர்த்தத்தின் போது இன்னுமொரு சிறுமி உயிரிழந்த நிலையில், ஹிருணியை கண்டுபிடிக்க முடிவில்லை. அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக குடும்பம் நம்பிக்கை கொண்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் <a href="https://www.bing.com/videos/riverview/relatedvideo?q=%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%bf&amp;cvid=bc0e17f25ff741d4b4111174192d968a&amp;gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBBzI1NWowajmoAgiwAgE&amp;PC=U531&amp;ru=%2fsearch%3fq%3d%25E0%25AE%25B9%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%26cvid%3dbc0e17f25ff741d4b4111174192d968a%26gs_lcrp%3dEgZjaHJvbWUyBggAEEUYOdIBBzI1NWowajmoAgiwAgE%26FORM%3dANAB01%26PC%3dU531&amp;mmscn=vwrc&amp;mid=93B574045FFADF42382293B574045FFADF423822&amp;FORM=WRVORC" target="_blank" rel="noopener">ஹிருணி</a>யை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் அவரது தாயும் மூத்த சகோதரியும் அவரை கண்டுபிடிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>அதற்கமைய, தற்போது இவரின் வடிவமாக கருதப்படும் AIதொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.</p>
<p>மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0711856162 அல்லது 0112515961 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு, அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரஷ்யாவில் 7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம்&#8230;! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/magnitude-7-powerful-earthquake-hits-russia-today/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Aug 2024 07:16:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Earthquake]]></category>
		<category><![CDATA[Magnitude 7 Powerful Earthquake Hits Russia Today]]></category>
		<category><![CDATA[russia]]></category>
		<category><![CDATA[tsunami]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=158810</guid>

					<description><![CDATA[ரஷ்யாவில் 7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம்&#8230;! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல் ரஷ்யாவில் (russia) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த போதிலும், பின்னர் அது சுனாமி நிலை அல்ல [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ரஷ்யாவில் 7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம்&#8230;! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/world/2024/08/15/heavy-attack-of-ukraine/">ரஷ்யாவில்</a> (russia) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>குறித்த நிலநடுக்கமானது ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த போதிலும், பின்னர் அது சுனாமி நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்த கடற்பகுதியில் பல எரிமலைகள் உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
