<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Transparency International &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/transparency-international/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 12 Apr 2023 05:23:16 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Transparency International &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஊழலை ஒழிக்க ஒன்றிணையுங்கள்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/unite-to-eradicate-corruption/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/unite-to-eradicate-corruption/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Apr 2023 05:23:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Transparency International]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=73015</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் தொழிநுட்ப உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கரிசனை செலுத்தி இலங்கையிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கும் நிலையான பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பிரஜைகள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகத்துடன் இணைந்து செயல்பட ஒன்றிணையுமாறு ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த நிறுவனத்தால் செவ்வாயக்கிழமை (11) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் முக்கிய இரண்டு விடயங்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் தொழிநுட்ப உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கரிசனை செலுத்தி இலங்கையிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கும் நிலையான பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பிரஜைகள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகத்துடன் இணைந்து செயல்பட ஒன்றிணையுமாறு ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.</p>
<p>குறித்த நிறுவனத்தால் செவ்வாயக்கிழமை (11) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,</p>
<p>இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் முக்கிய இரண்டு விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்வதாகவும் இச்சட்டமானது தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட மற்ற அனைத்து எழுதப்பட்ட சட்டங்களையும் மீற முற்படுகிறது என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>முன்மொழியப்பட்ட சட்டத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் இரகசிய பாதுகாப்பு/காப்பு பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டிய பிரிவுகள் காணப்படுகின்றன.</p>
<p>ஆகவே, புதிய சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தகவல்களை வெளியிடுவது ஆணைக்குழுவின் சிறப்பு அனுமதியுடன் மாத்திரமே சாத்தியமாகும்.</p>
<p>எனவே, இம்முன்மொழியப்பட்ட சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடமிருந்து தகவல்களை அணுகுவதை மிகவும் கடினமாக்குவதன் மூலம் இரகசிய கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது.</p>
<p>மேலும் மசோதாவில் கூறப்பட்டுள்ள &#8220;ஆட்சியில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல்&#8221; எனும் நோக்கமும் மறுக்கப்படுகிறது.</p>
<p>ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல்  நிறுவனம் கரிசனை கொள்ளும் இரண்டாவது விடயமானது, தவறான குற்றச்சாட்டுகளை குறிக்கும் இந்த மசோதாவின் பிரிவு 119 ஆனது, ஊழல் தொடர்பில் தகவல் வழங்க விரும்பும் பொதுமக்களுக்கும் முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்களுக்கும் எதிர்மறையான சமிக்ஞையை தோற்றுவிக்க கூடும் என நிறுவனம் குறிப்பிடுகிறது.</p>
<p>தற்போதைய சட்டத்திலும் காணப்படுகின்ற அதே சட்ட ஏற்பாடானது ஊழலுக்கு எதிராக செயற்படும் நபர்களை குறிவைத்து தவறாக பயன்படுத்தப்படவில்லை.</p>
<p>என்றாலும், அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தும் பொதுச் சேவையின் பின்னணியில் அல்லது ஜனநாயகம் வலுவிழந்த நிலை அல்லது பலவீனமான ஆட்சிமுறைமை அல்லது ஊழல் மிக்கவர்களின் ஆட்சி போன்ற பாதகமான சூழ்நிலையில் இந்த சட்ட ஏற்பாடானது தீவிர எதிர்விளைவு மற்றும் ஆபத்துக்கூடியாதாக மாறும்.</p>
<p>பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்திற்காக தமது செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஓர் அமைப்பு என்றடிப்படையில் இந்த முன்மொழியப்பட்ட மசோதாவானது மிகவும் வலுவானதாக அமைய வேண்டும் என்று ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் கருதுகிறது.</p>
<p>அதேவேளை, ஊழல் தொடர்பில் தகவல் வழங்க விரும்பும் பொதுமக்களுக்கும் முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது ஊழல் தொடர்பில் முறையிட ஊக்குவிக்க வேண்டும் என்று கருதுவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/unite-to-eradicate-corruption/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஊழல் அதிகரிக்கும் நாடாக இலங்கை !! &#8211; ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்</title>
		<link>https://tamilnaadi.com/news/sri-lanka-is-a-country-where-corruption-is-on-the-rise/</link>
					<comments>https://tamilnaadi.com/news/sri-lanka-is-a-country-where-corruption-is-on-the-rise/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jan 2022 14:45:41 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corrupt]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Transparency International]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=36861</guid>

					<description><![CDATA[சுத்தமான நிதியளிப்பு தொடர்பான முன்னணி சர்வதேச அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள சமீபத்திய ஊழல் புலனாய்வு சுட்டெண்ணின் படி, இலங்கை ஊழல் நிறைந்த நாடுகளில் மேலும் எட்டு இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட சுட்டெண்ணின் படி, இலங்கை 2021 ஆம் ஆண்டில் ஊழல் மிகுந்த நாடுகளில் 102 ஆவது இடத்திலும், 2020 இல் 94 ஆவது இடத்திலும் இருந்தது. இம்முறை குறியீட்டை கணக்கிட 180 நாடுகளின் தரவு பயன்படுத்தப்பட்டது. இச் சுட்டெண்ணின் படி இலங்கை 37 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுத்தமான நிதியளிப்பு தொடர்பான முன்னணி சர்வதேச அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள சமீபத்திய ஊழல் புலனாய்வு சுட்டெண்ணின் படி, இலங்கை ஊழல் நிறைந்த நாடுகளில் மேலும் எட்டு இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது.</p>
<p>நேற்று வெளியிடப்பட்ட சுட்டெண்ணின் படி, இலங்கை 2021 ஆம் ஆண்டில் ஊழல் மிகுந்த நாடுகளில் 102 ஆவது இடத்திலும், 2020 இல் 94 ஆவது இடத்திலும் இருந்தது.</p>
<p>இம்முறை குறியீட்டை கணக்கிட 180 நாடுகளின் தரவு பயன்படுத்தப்பட்டது.</p>
<p>இச் சுட்டெண்ணின் படி இலங்கை 37 புள்ளிகளைப் பெற்றுள்ளது.</p>
<p>0 இன் மதிப்பு மிகவும் மாசுபட்ட நாடு என்றும், 100ற்கும் அருகில் உள்ள மதிப்பு மிகவும் சுத்தமான நாடாகவும் கருதப்படுகிறது.</p>
<p>88ல், டென்மார்க், பின்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகியவை குறியீட்டில் முதலிடத்திலும், சோமாலியா மற்றும் சிரியா 13ஆவது இடத்திலும், தெற்கு சூடான் 11ஆவது இடத்திலும் உள்ளன.</p>
<p>அண்மைக் காலமாக ஊழலைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமையால் நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்து வரும் நாடாக மாறியுள்ளது.</p>
<p>எதிர்காலத்தில் இவ்வாறான மோசடிகளையும் ஊழலையும் கட்டுப்படுத்தத் தவறினால் இலங்கை அரசாங்கம் விரைவில் ஊழல் நிறைந்த நாடுகளை நோக்கி நகரும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/sri-lanka-is-a-country-where-corruption-is-on-the-rise/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விசாரணைகளை துரிதப்படுத்துக! &#8211; ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் வலியுறுத்து</title>
		<link>https://tamilnaadi.com/news/speed-%e2%80%8b%e2%80%8bup-investigations-transparency-international/</link>
					<comments>https://tamilnaadi.com/news/speed-%e2%80%8b%e2%80%8bup-investigations-transparency-international/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Oct 2021 21:28:26 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[investigations]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Transparency International]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=14828</guid>

					<description><![CDATA[பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகளின் இரகசிய நிதி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக மீண்டும் உலகிற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை உட்பட வெளிநாடுகளில் ஊழல் எவ்வாறு கடல் கடந்த நிறுவனங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா வலியுறுத்தியுள்ளது.</p>
<p>இந்த விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உலகத் தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகளின் இரகசிய நிதி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக மீண்டும் உலகிற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கை உட்பட வெளிநாடுகளில் ஊழல் எவ்வாறு கடல் கடந்த நிறுவனங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றது மற்றும் இறுதி நன்மை பெறும் உரிமையாளர்களின் பதிவேடுகளை வெளிப்படையாக பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் இவ்விடயங்கள் தெளிவாக வலியுறுத்தும் ஆதாரங்களாக அமைந்துள்ளன.</p>
<p>முன்னாள் நீர்ப்பாசன வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் மற்றும் அவரது கணவர் ஆகியோரின் கடல் கடந்த பாரியளவான சொத்துக்களை இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.</p>
<p>பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கையின் உரிய அதிகாரசபைகளிடம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கேட்டுக்கொள்கிறது.</p>
<p>சட்ட அமுலாக்க அதிகாரசபைகளுக்கும் நீதித்துறைக்கும் எந்தவொரு தலையீடுகளும் இன்றி சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பான நிலுவையிலுள்ள விசாரணைகளை முன்னெடுப்பதும் முடிவுகளை மேற்கொள்ளவதும் இன்றியமையாததாகும்.</p>
<p>பண்டோரா பேப்பர்களில் அடையாளம் காணப்பட்ட சொத்துக்கள் இலங்கையில் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்தி பெறப்பட்டதா என்பதை அறிய ஓர் விரிவான விசாரணையை உள்நாட்டில் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ட்ரான்ஸ் பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மீண்டும் வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/speed-%e2%80%8b%e2%80%8bup-investigations-transparency-international/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
