<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tissa Attanayake &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/tissa-attanayake/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 24 Feb 2025 14:30:56 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Tissa Attanayake &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சஜித்தின் கட்சிக்குள் ஊடுருவியுள்ள அமெரிக்க முகவர்கள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tissa-attanayake-resigns-from-core-group/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Feb 2025 10:36:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[sjb]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake Resigns From Core Group]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=192697</guid>

					<description><![CDATA[சஜித்தின் கட்சிக்குள் ஊடுருவியுள்ள அமெரிக்க முகவர்கள்! ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் சில அங்கத்தவர்கள் கட்சியின் செயற்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளும் தரப்பின் செயற்பாடு தொடர்பிலான விமர்சனங்களை ஐக்கிய மக்கள் சக்தி அடுக்கிக்கொண்டு இருந்தாலும், உட்கட்சி விரிசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து (USAID) அக்கட்சியின் சில தரப்பினர் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அதனுடன் தொடர்புடைய நாடாளுமன்ற [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சஜித்தின் கட்சிக்குள் ஊடுருவியுள்ள அமெரிக்க முகவர்கள்!</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2025/01/12/iran-wickramaratne-resigns/">ஐக்கிய மக்கள் சக்தி</a>யின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் சில அங்கத்தவர்கள் கட்சியின் செயற்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>ஆளும் தரப்பின் செயற்பாடு தொடர்பிலான விமர்சனங்களை ஐக்கிய மக்கள் சக்தி அடுக்கிக்கொண்டு இருந்தாலும், உட்கட்சி விரிசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது.</p>
<p>இந்நிலையில் ஐக்கிய அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து (USAID) அக்கட்சியின் சில தரப்பினர் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், அதனுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்துமாறு கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>சுஜீவ சேனசிங்க தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இது தொடர்பாக இந்த முயற்சியை எடுத்துள்ளதாக அறியப்படுகிறது</p>
<p>கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் USAID-இலிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து எங்களுக்கு இப்போது கடுமையான சந்தேகங்கள் உள்ளன என சுஜீவ சேனசிங்க தரப்பு பகிரங்கப்படுத்தியுள்ளது.</p>
<p>அவர்கள் எங்கள் கட்சியின் சித்தாந்தத்தையும் திட்டங்களையும் ரணில் விக்ரமசிங்கவின் நலன்களுக்கு ஏற்ப கையாள முயன்றார்களா என்ற சந்தேகங்கள் உள்ளன என்றும் குற்றம ்சுமத்தப்படுகிறது.</p>
<p>சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்க முகவர்கள் எங்கள் கட்சிக்குள் ஊடுருவியுள்ளார்களா என்பது குறித்து எங்களுக்கு கடுமையான சந்தேகங்கள் உள்ளன.</p>
<p>இது குறித்து உடனடியாக ஆராயுமாறு நேற்று தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம் என அத்தரப்பு வலியுறுத்தியுள்ளது.</p>
<p>குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சில எம்பிக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது பொருளாதாரத் திட்டத்தைப் பகிரங்கமாகப் பாராட்டினர் என்றும்,  இதன் அடிப்படையில் அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்று என்று மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.</p>
<p>இவ்வாறான சில முறுகள்கள் தற்போது கட்சிக்குள் நீடித்து வருகிறது.</p>
<p>இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்காக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) கூறியுள்ளார்.</p>
<p>சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் நேற்று கலந்துக்கொண்டு அவர் இதனை கூறியுள்ளார்.</p>
<p>மேலும் கருத்து தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, “எங்கள் இயக்குநர்கள் குழு மற்றும் நிர்வாகக் குழு விவாதத்தைத் தொடங்க முடிவு செய்திருந்தன.</p>
<p>அது குறித்து ஏதேனும் தெளிவின்மை இருந்தால், அதைத் தெரிவித்திருக்கலாம். ஜக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டிய அவசியமில்லை என்றால், அது குறித்து முடிவெடுப்பதன் மூலம் இதன் கதவை மூடியிருக்கலாம்.</p>
<p>அதைத் தவிர, ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவது, அச்சுறுத்துவது, சதித்திட்டம் அறிவித்தல் போன்றவை இதற்குப் பொருந்தாது.</p>
<p>அதனால்தான் கட்சித் தலைவர் அவதூறு செய்யப்படுவதைக் கண்டேன்.</p>
<p>சஜித் பிரேமதாசவை இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக்குவதே எங்கள் ஆரம்ப இலக்காக இருந்தது.</p>
<p>நான் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.</p>
<p>இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், அடுத்த படைப்பு அதிகாரிகளின் குழு அந்த நிலைப்பாட்டை முடிவு செய்யும் வரை இந்தப் பேச்சுவார்த்தைகளில் நான் மீண்டும் இணைய மாட்டேன்” என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அநுர அரசு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் : சஜித் தரப்பு கோரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/npp-accepted-etca-apologize-to-the-people-sjb/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Dec 2024 15:58:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[National People's Power - NPP]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=184084</guid>

					<description><![CDATA[அநுர அரசு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் : சஜித் தரப்பு கோரிக்கை எட்கா (ETCA) ஒப்பந்தத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்தார். எட்கா ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை குறித்து வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அநுர அரசு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் : சஜித் தரப்பு கோரிக்கை</h4>
<p>எட்கா (ETCA) ஒப்பந்தத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட <a href="https://tamilnaadi.com/uncategorized/2024/11/15/national-peoples-power-npp/">தேசிய மக்கள் சக்தி</a> (NPP) இன்று அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்தார்.</p>
<p>எட்கா ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை குறித்து வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p>
<p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) இந்திய விஜயத்தின் போது இரு நாட்டு அரச தலைவர்களுக்கும் இடையில் பிரதான சில விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.</p>
<p>எட்கா, மின்சக்தி மற்றும் வலுசக்தி துறை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. இவை இதற்கு முன்னரும் பல்வேறு அரசாங்கங்களால் அவதானம் செலுத்தப்பட்ட ஒரு காரணியாகும்.</p>
<p>ஆனால் அநுரகுமார திசாநாயக்க அந்த பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் சென்று பதிலளித்துள்ளார். மகிந்த (Mahinda), மைத்திரி (Maithri), கோட்டா (Gotabaya) மற்றும் ரணில் (Ranil) அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கம் விரைவாகச் செல்வதாகவே தோன்றுகிறது.</p>
<p>தேர்தலுக்கு முன்னர் எட்கா ஒப்பந்தத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட பிரதான தரப்பு தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகும். தற்போது இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. ஆனால் மக்களிடம் அதனை மறைக்கின்றனர்.</p>
<p>எந்தவொரு நாட்டுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதானால் அதனை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும்.</p>
<p>அதேபோன்று அன்று இவற்றை எதிர்த்து விட்டு, தற்போது சரியென ஏற்றுக் கொள்வார்களானால் அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அன்று மக்களை நாம் ஏமாற்றி விட்டோம். ஆனால் இதுவே யதார்த்தம் என்பதை அரசாங்கம் நாட்டுக்கு கூற வேண்டும்“ என தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சஜித் மீது திஸ்ஸ அதிருப்தி! கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டுமாம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/samagi-jana-bala-wegaya-internel-issue/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 14:30:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[Samagi Jana Bala Wegaya Internel Issue]]></category>
		<category><![CDATA[Samagi Jana Balawegaya]]></category>
		<category><![CDATA[Sri Lankan political crisis]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=181432</guid>

					<description><![CDATA[சஜித் மீது திஸ்ஸ அதிருப்தி! கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டுமாம் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் தற்போதைய பலமான அரசுடன் அரசியல் ரீதியில் மோதுவதென்பது பெரும் சவாலாகவே அமையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன மறுசீரமைக்கப்பட வேண்டும். அதற்குரிய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சஜித் மீது திஸ்ஸ அதிருப்தி! கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டுமாம்</h4>
<p>நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படும்<a href="https://tamilnaadi.com/news/local/2024/10/07/sujeewa-senasinghe-going-to-contest-in-kandy/"> ஐக்கிய மக்கள் சக்தி</a> விரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் தற்போதைய பலமான அரசுடன் அரசியல் ரீதியில் மோதுவதென்பது பெரும் சவாலாகவே அமையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) தெரிவித்தார்.</p>
<p>இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன மறுசீரமைக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை விரைவில் இடம்பெறவேண்டும்.</p>
<p>இதனை வலியுறுத்தும் வகையிலேயே கடந்த தேர்தல் முடிவுகள் அமைந்தன. எனவே, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மாற்றம் இடம்பெறவேண்டும்.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறு நடக்க வேண்டும் என நானும் வலியுறுத்துகின்றேன்.</p>
<p>புதிய மாற்றமொன்றை நாம் மக்களுக்கு காட்டியாக வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தற்போதுள்ள அரசுடன் அரசியல் சமரில் வெல்வது சவாலாக அமையும்.</p>
<p>அதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டணி உடைவதை நாம் விரும்பவில்லை. அதனால்தான் கலந்துரையாடல் மூலம் தேசியப்பட்டியல் பிரச்சினையைத் தீர்த்தோம் என தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சஜித் அணியின் சர்ச்சைக்குரிய தேசியப் பட்டியல் : வெளியான அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sjb-s-national-list-issue-final-decision/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Dec 2024 05:15:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Parliament Election 2024]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[sjb]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=180772</guid>

					<description><![CDATA[சஜித் அணியின் சர்ச்சைக்குரிய தேசியப் பட்டியல் : வெளியான அறிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் குறித்து உறுதியான தீர்மானம் எடுப்பது கடினமாக உள்ளதுடன் இதுவரை இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்தார். கொழும்பில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் பெற்றுக் கொண்ட [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சஜித் அணியின் சர்ச்சைக்குரிய தேசியப் பட்டியல் : வெளியான அறிவிப்பு</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/10/07/sujeewa-senasinghe-going-to-contest-in-kandy/">ஐக்கிய மக்கள் சக்தி</a>யின் தேசியப் பட்டியல் குறித்து உறுதியான தீர்மானம் எடுப்பது கடினமாக உள்ளதுடன் இதுவரை இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்தார்.</p>
<p>கொழும்பில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.</p>
<p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் பெற்றுக் கொண்ட மொத்த வாக்கு வீதத்துக்கு அமைய ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் (Ranjith Madduma Bandara) பெயர் மாத்திரம் குறிப்பிடப்பட்டது. மிகுதி தேசியப் பட்டியல் ஆசனங்களை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.</p>
<p>கிடைக்கப் பெற்ற தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு இதுவரையில் பெயர் குறிப்பிடாமல் இருப்பது குறித்து பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. கூட்டணி என்ற அடிப்படையில் பல இணக்கப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.</p>
<p>தேசியப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டிய முக்கியமான நபர்களும் உள்ளனர். அத்துடன் மேலும் சிலர் தேசிய பட்டியலுக்காக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே இவ்விடயங்கள் அனைத்தையும் ஆராய வேண்டும்.</p>
<p>இவ்வாறான பின்னணியில் தேசிய பட்டியல் விவகாரத்தில் உறுதியான தீர்மானம் எடுப்பது கடினமாக உள்ளது. எனவே தேசிய பட்டியல் குறித்து இதுவரை இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளோம்.</p>
<p>ஆகவே வெகுவிரைவில் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். தாமதப்படுத்தாமல் தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன். இல்லையேல் மக்கள் விமர்சிப்பார்கள்.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் கடைப்பிடித்த கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் பின்னடைவை எதிர்க்கொள்ள நேரிட்டது என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.<br />
&#8211;<br />
மக்களின் மனங்களை வெல்லக் கூடிய வகையில் கட்சியை மறுசீரமைக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று ஒரு சிலர் வலியுறுத்துகிறார்கள். இவை அனைத்தும் நிறைவேற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளேன். அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இணக்கமாக செயற்பட வேண்டும், மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டும்.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தி புதிய மாற்றத்தை நாட்டு மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். சிறந்த மாற்றத்தை செயற்படுத்த கூடிய திறமையானவர்கள் கட்சியில் இருக்க வேண்டும். மறுசீரமைப்புடன் புதிய முகத்துடன் செயற்படாவிடின் அரசாங்கத்துடன் போட்டியிடவும் முடியாது, மக்களின் மனங்களை வெல்லவும் முடியாது” என தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாகன விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க காயம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/dissa-athanaya-vehicle-accident/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jul 2024 04:26:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Accident]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Dissa Athanaya Vehicle Accident]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Samagi Jana Balawegaya]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=152043</guid>

					<description><![CDATA[வாகன விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க காயம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் வாகனம் ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில், நாரஹேன்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர், காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வாகன விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க காயம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/04/06/sjb-new-party-crisis/">ஐக்கிய மக்கள் சக்தி</a>யின் நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95#:~:text=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%20%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%28Attanayake%20Mudiyanselage%20Kudabanda,Attanayake%2C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A%20%E0%AE%AE%E0%AF%87%2017%2C%201961%29%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D." target="_blank" rel="noopener">திஸ்ஸ அத்தநாயக்க</a> பயணித்த சொகுசு ஜீப் வாகனம் ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில், நாரஹேன்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர், காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினரின் சொகுசு ஜீப் வாகனமும் காரொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி: கவலை வெளியிடும் சஜித்தின் சகா</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sjb-new-party-crisis/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/sjb-new-party-crisis/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Apr 2024 13:17:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[sjb]]></category>
		<category><![CDATA[Sjb New Party Crisis]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=131049</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி: கவலை வெளியிடும் சஜித்தின் சகா பல்வேறு கட்சிகளை ஐக்கிய மக்கள் சக்திக்குள் இணைத்து ஜன கூட்டணி அமைப்பது பொருத்தமற்ற விடயம் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) கவலை வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். மேலும், புதிய கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு உரிய முறையில் விளக்கமளிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி: கவலை வெளியிடும் சஜித்தின் சகா</h4>
<p>பல்வேறு கட்சிகளை <a href="https://tamilnaadi.com/news/local/2024/02/11/%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3/">ஐக்கிய மக்கள் சக்தி</a>க்குள் இணைத்து ஜன கூட்டணி அமைப்பது பொருத்தமற்ற விடயம் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) கவலை வெளியிட்டுள்ளார்.</p>
<p>ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.</p>
<p>மேலும், புதிய கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு உரிய முறையில் விளக்கமளிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே குற்றச்சாட்டை அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவும் முன்வைத்திருந்தார்.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின்(Sajith Premadasa) தலைமையில் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி ஒப்பந்தத்தில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/sjb-new-party-crisis/feed/</wfw:commentRss>
			<slash:comments>3</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சரிவடையும் நாட்டின் பொருளாதாரம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/thissa-attenayake-sjb-economy/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/thissa-attenayake-sjb-economy/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jul 2023 13:49:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[sjb]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=79467</guid>

					<description><![CDATA[சரிவடையும் நாட்டின் பொருளாதாரம் எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தற்போதையை பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாது ஆனால் எதிர்வரும் மாதங்களில் பாரிய சரிவை எதிர்நோக்க நேரிடும். அரசாங்கம் உள்நாட்டு கடன் மறு சீரமைப்பு என்ற போர்வையில் இரகசிய வேலைகளை செய்துள்ளது. இதனால் பிரச்சினை இல்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை சந்திக்க [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சரிவடையும் நாட்டின் பொருளாதாரம்</h4>
<p>எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை தற்போதையை பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாது ஆனால் எதிர்வரும் மாதங்களில் பாரிய சரிவை எதிர்நோக்க நேரிடும்.</p>
<p>அரசாங்கம் உள்நாட்டு கடன் மறு சீரமைப்பு என்ற போர்வையில் இரகசிய வேலைகளை செய்துள்ளது.</p>
<p>இதனால் பிரச்சினை இல்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/thissa-attenayake-sjb-economy/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாட்டில் எந்த மாற்றமும் இல்லை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/no-change-in-the-country/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/no-change-in-the-country/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 30 May 2022 05:39:39 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[kandy]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=51846</guid>

					<description><![CDATA[இலங்கையின் அரசியல் புலத்தில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட வில்லை, தொடர்ந்தும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியங்கள் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் தெரிவித்தார். கண்டியில் நடந்த வைபவம் ஒன்றை அடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- கடந் 9ம் திகதி நடந்த சம்பவங்களை அடுத்து அரசியலில் புதுவிதமான மாற்றங்களை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து புதிய போத்தலில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் அரசியல் புலத்தில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட வில்லை, தொடர்ந்தும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியங்கள் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் தெரிவித்தார்.</p>
<p>கண்டியில் நடந்த வைபவம் ஒன்றை அடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-</p>
<p>கடந் 9ம் திகதி நடந்த சம்பவங்களை அடுத்து அரசியலில் புதுவிதமான மாற்றங்களை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து புதிய போத்தலில் பழைய மதுவை ஊற்றி கதைதான் நடந்து வருகிறது.</p>
<p>நிதி அமைச்சை பிரதமர் பொறுப் பேற்ற போதும் ஏனைய அமைச்சர்கள் ஏற்கனவே இருந்த அமைச்சர்கள்தான் தொடர்ந்தும் உள்ளனர். அதே அமைச்சர்களும் அதிகாரிகளும் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஒரு ட்ரிலியன் பணம் புதிதாக அச்சிட உள்ளதாக நிதி அமைச்சர் முதலாவதாக அறிவித்துள்ளார். இது நல்ல சகுனம் அல்ல. மேலும் மேலும் பணவீக்கம் ஏற்பட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு நிலையேயாகும். புதிதாக பணம் அச்சிட்டு அரசாங்கத்தை நடத்துவது என்பது எவராலும் செய்ய முடிந்த காரியமாகும். அதற்கு ஆட்சியையோ பாராளுமன்றமோ அமைச்சுக்களோ தேவையில்லை.</p>
<p>இன்னும் பழைய ஆட்சியாளர்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளே நடக்கின்றன.</p>
<p>நாடும் நாமும் எதிர்பார்த்தது அரசியல் அமைப்பில் 19 பிளஸ் திருத்தத்தையாகும். அதாவது 19 வது திருதத்தை விடவும் சக்தி மிக்க ஒன்றை எதிர்பாத்த்தோம் . ஆனால் உத்தேச 20 வது திருத்தம் அப்படி எதையும் திருப்திப்படுத்துவதாக இல்லை.</p>
<p>நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதை எதிர்பார்த்தனர். அது நடப்பதாக இல்லை. 21ம் திருத்தத்தில் நல்ல அம்சங்கள் இருப்பின் நாம் அதை ஆதரிப்பதில் பிரச்சினை இல்லை.</p>
<p>ஐ.ம.ச நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார முதலானோர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தக்க நியாயம் தெரிவிக்காத பட்சத்தில் அவர்கள் கட்சியால் ஒழுக்காற்று விசாரணைக்கு உற்படுத்தப்படுவர் என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/no-change-in-the-country/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கோட்டா அரசுக்கு எதிரான பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகருக்கு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/motion-against-the-government/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/motion-against-the-government/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Apr 2022 07:00:01 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=45775</guid>

					<description><![CDATA[அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.</p>
<p>அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எதிர்வரும் 17ஆம் திகதி இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/motion-against-the-government/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பஸில் கூறுவது பொய்! – அழுத்திக்கூறுகிறார் திஸ்ஸ அத்தநாயக்க</title>
		<link>https://tamilnaadi.com/news/local/what-basil-says-is-a-lie-tissa-attanayake-insists/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/what-basil-says-is-a-lie-tissa-attanayake-insists/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Mar 2022 15:53:23 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[credit]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=43750</guid>

					<description><![CDATA[&#8221; கடன் வழங்குவதற்கு இந்தியா எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கூறுவது பொய். இந்தியாவால் பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.&#8221; &#8211; இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் டைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, &#8221; இந்தியாவால் இலங்கைக்கு ஒரு பில்லியன் கடன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8221; கடன் வழங்குவதற்கு இந்தியா எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கூறுவது பொய். இந்தியாவால் பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.&#8221; &#8211; இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.</p>
<p>எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் டைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,</p>
<p>&#8221; இந்தியாவால் இலங்கைக்கு ஒரு பில்லியன் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பணமாக அல்ல. இந்த கடனுக்கு எவ்வித நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை என நிதி அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.</p>
<p>இலங்கையின் வான்பரப்பை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கு இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகில் எந்தவொரு நாடும் இவ்வாறு அனுமதி வழங்குவதில்லை. இது நாட்டில் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலான விடயமாகும்.</p>
<p>இலங்கையின் கடல வளத்திலும் இந்திய தலையீட்டை உறுதிப்படுத்தும் விதத்திலான நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.</p>
<p>அத்துடன், டிஜிட்டல் அட்டை விநியோகத்தின்போது அது தொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. இதன்மூலம் எமது நாட்டு மக்களின் தரவுகள் பிரிதொரு தரப்புக்கு செல்லும் அச்சுறுத்தலும் காணப்படுகின்றது. &#8221; &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/what-basil-says-is-a-lie-tissa-attanayake-insists/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
